ஆப்நகரம்

மரத்தையெல்லாம் வெட்டி கோவை ஸ்மார்ட் சிட்டி ஆகணுமா?: தீவிரமெடுக்கும் போராட்டம்!

ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட வீதிகளில் கருப்பு சட்டை அணிந்து நடைப்பயிற்சி மேற்கொண்ட சமூக ஆர்வலர்களின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 21 Apr 2021, 5:44 pm
கோவை மாவட்டத்தில் பல கோடி ரூபாய் செலவில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணியின் மூலம் குளங்கள் அனைத்தும் சீரமைக்கப்பட்டு குளக்கரைகள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நடைபாதைகள், குழந்தைகள் விளையாடுவதற்கு விளையாட்டு பூங்காக்கள் போன்றவை அமைக்கப்பட்டு வருகின்றன.
Samayam Tamil மரத்தையெல்லாம் வெட்டி கோவை ஸ்மார்ட் சிட்டி ஆகணுமா?: தீவிரமெடுக்கும் போராட்டம்!


கோவையின் முக்கிய இடங்களான ஆர்எஸ் புரம், ரேஸ் கோர்ஸ் ஆகிய பகுதிகளும் சீரமைக்கப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் பணிகள் காண்பதற்கு அழகாக இருந்தாலும் இயற்கைக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் செயல்படுத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்த கருத்துகளுக்கு ஆதாரமாகவும் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறின.

நடிகர் விவேக் கனவை நிஜமாக்கும் திமுக: கோவையில் அறிவிப்பு!

இந்த சூழலில் இப்போது ஸ்மார்ட் சிட்டி பணிகள் எனக் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் சுமார் 3 கிலோ மீட்டருக்குச் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக அந்த பகுதியிலிருந்த சாலையோர மரங்கள் வெட்டப்படுகின்றன.

மரங்கள் வெட்டப்படுவதற்கு சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 50க்கும் மேற்பட்ட சமூக ஆர்வலர்கள் கருப்புச்சட்டை அணிந்து ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைப் பயிற்சி கொண்டனர்.

இவர்களுக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் கட்சியைச் சேர்ந்த மகேந்திரன், காங்கிரஸ் கட்சியின் மயூரா ஜெயக்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர். ஸ்மார்ட் சிட்டி பணிகள் என்ற பெயரில் இயற்கையை அளித்து வருவதாகவும் இதனால் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது மட்டுமின்றி பறவைகளின் இருப்பிடங்கள் அளிக்கப்படுவதாகவும் பேரணியாகச் சென்றவர்கள் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி