ஆப்நகரம்

கோவையில் கல்லீரல் செயல் இழந்தவர்களுக்கு பிரத்யேக சிகிச்சை மையம்: காவல்துறை தலைவர் தொடங்கி வைத்தார்

கோவையில் துவங்கப்பட்டுள்ள கல்லீரல் செயல் இழந்தவர்களுக்கான பிரத்யேக சிகிச்சை மையம் குறிப்பாக விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றவர்களை காப்பாற்ற பேருதவியாக இருக்கும் என மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

Edited byசு. கணபதி சுப்பிரமணியன் | Samayam Tamil 18 Apr 2023, 5:58 pm

ஹைலைட்ஸ்:

  • கோவையில் கல்லீரல் செயல் இழந்தவர்களுக்கு பிரத்யேக சிகிச்சை மையம்
  • தற்கொலைக்கு முயன்றவர்களை காப்பாற்ற பேருதவியாக இருக்கும்
  • மேற்கு மண்டல காவல்துறை தலைவர் தொடங்கி வைத்தார்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Coimbatore
Coimbatore
கல்லீரல் செயல் இழப்பு
கல்லீரல் செயல் இழப்பு என்பது இந்தியாவில் நிகழும் இறப்புகளுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது.குறிப்பாக இளம் தற்கொலையினால் உயிர் இழக்கும் பெரும்பாலோனோர் விஷம் அருந்தியே உயிரிழக்கின்றனர். இதற்கு முக்கிய காரணமாக விஷம் அருந்தியவுடன் ஏற்படும் கல்லீரல் பாதிப்பையே மருத்துவர்கள் காரணமாக கூறுகின்றனர்.
நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவதற்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டிய காலம் வந்துவிட்டது-மதுரை நீதிபதிகள் கருத்து
பிரத்யேக சிகிச்சை மையம்
இந்நலையில் மேற்கு தமிழகத்திலேயே முதன் முறையாக கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனை வளாகத்தில், கல்லீரல் தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்துவது,மற்றும் மாற்று கல்லீரல் தேவைப்படும் நோயாளிகளுக்கான பிரத்யேக சிகிச்சை மையம் துவக்கப்பட்டுள்ளது.
தொடக்க விழா
இதற்கான துவக்க விழா மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தலைமையில் நடைபெற்ற துவக்க விழாவில், பிரத்யேக கல்லீரல் செயல் இழப்பு பிரிவை தமிழக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடியில் 4-வது புத்தகத் திருவிழா பணிகள்: ஆட்சியர் நேரில் ஆய்வு
தற்கொலை
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா காலகட்டத்திற்கு பிறகு சிறிய அளவிலான பிரச்னைகளுக்கும் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறிய அவர், இதில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயல்பவர்களை காப்பாற்றுவதில் பெரும் சவாலாக உள்ள கல்லீரல் சிகிச்சையில், கோவையில் துவங்கப்பட்டுள்ள கல்லீரல் செயல் இழந்தவர்களுக்கான பிரத்யேக சிகிச்சை மையம் குறிப்பாக விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றவர்களை காப்பாற்ற பேருதவியாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.
எழுத்தாளர் பற்றி
சு. கணபதி சுப்பிரமணியன்
நான் கணபதி சுப்பிரமணியன். ஊடகத்துறையில் 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். தேசிய, சர்வதேச, சினிமா செய்திகள் எழுதிய அனுபவம் உள்ளது. இப்போது சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணிபுரிந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி