ஆப்நகரம்

கோவை: 30 கிமீதான் இனி கோவை வாகனங்களுக்கு லிமிட், மீறினால் உடனுக்குடன் அபராதம்!

கோவை மாநகரில் 40 கிலோமீட்டர் வேகத்தைத் தாண்டி வாகனத்தை இயக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறபித்துள்ளார்.

Samayam Tamil 27 Jul 2021, 7:31 am
கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் உத்தரவுப்படி கோவை மாநகர காவல் எல்லைக்குள் வேகக்கட்டுப்பாடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil கோவை: 30 கிமீதான் இனி கோவை வாகனங்களுக்கு லிமிட், மீறினால் உடனுக்குடன் அபராதம்!


அதன்படி காந்திபுரம் முதல் கணபதி வரையிலும், 100 அடி ரோடு, கிராஸ்கட் ரோடு, பாரதியார் ரோடு, சுக்கிரவார் பேட்டை முதல் மேம்பாலம் வரையிலும்,வைசியாள் வீதி முதல் செல்வபுரம் வரையிலும் என அறிவிக்கப்பட்ட சாலைகளில் அதிகபட்சம் மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே வாகனங்களை இயக்க முடியும்.

அதேபோல் கோவை மாநகரில் ஏனைய பகுதிகளில் உள்ள சாலைகளில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாநகர எல்லைக்குள் ஏற்படும் விபத்துகள் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக மேற்கண்ட வேகக் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கோவையைச் சிறப்பாகக் கவனிக்கும் எஸ்பி வேலுமணி!
இந்த உத்தரவுகள் தொடர்பாகத் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு கோவை மாநகர காவல் ஆணையாளர் தீபக் எம் டமோர் மாநகர போக்குவரத்து காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதே சமயத்தில் வேகக்கட்டுப்பாட்டை வாகன ஓட்டிகள் மீறினால் அவர்கள் மீது மோட்டார் வாகனச் சட்டப்படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மேற்கண்ட கட்டுப்பாடுகளைப் பின்பற்றி சாலை விதியை கடைப்பிடித்து சீரான பயணத்தை மேற்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அடுத்த செய்தி