கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் நீ.குமார், தென்னிந்திய இஸ்ரேல் ஆலோசகர் ஜோனாதன் சாட்கா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியது: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் இஸ்ரேல் நாட்டுடன் இணைந்து பல்வேறு துறைகளை மேம்படுத்த ஆய்வு மேற்கொண்டது. இதற்காக தென்னிந்திய இஸ்ரேல் ஆலோசகர் ஜோனாதன் சாட்கா ஆகியோருடன் கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டது.
விவசாயத் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக நேனோ டெக்னாலஜி, சுற்றுச்சூழல் குறித்த ஆய்வு, ரிமோட் சென்சார்(ட்ரோன்) டெக்னாலஜி, நீர்வள தொழில்நுட்பம் குறித்து கலந்துரையாடப்பட்டது.
கோவை டூ ஹைதராபாத்... சுற்றுலா பிரியர்களுக்கு சூப்பர் நியூஸ்!
20 ஆண்டுகளாக இந்தியா, இஸ்ரேலின் தொழில்நுட்பத்தை பின்பற்றி வரும் நிலையில் தற்பொழுது அட்வான்ஸ் டெக்னாலஜியை கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கழிவுநீரை சுத்திகரித்து மீண்டும் அதனை விவசாயம் அல்லது வீடுகளுக்கு பயன்படுத்தும் முயற்சியில் ஒரு மாதிரி செய்யப்பட உள்ளது. இது ஏற்கெனவே இஸ்ரேல் நிறுவனத்தினர் ஊட்டி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் செய்து இருக்கின்றனர். அதனை ஆய்வு செய்து விரிவுப்படுத்த உள்ளோம்.
ட்ரோன் டெக்னாலஜியில் தற்பொழுது நாம் ஆட்களை பயன்படுத்தி சென்சார் மூலம் அதனை பயன்படுத்தி வரும் நிலையில் ஆட்கள் இல்லாமல் பயன்படுத்தும் டெக்னாலஜி பற்றியும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய அளவில் நேனோ டெக்னாலஜி மற்றும் விவசாயத்தில் நமது பல்கலைக்கழகம் சிறந்து விளங்குகிறது.
மேலும் இங்குள்ள ஆசிரியர்களுக்கு இந்த புதிய டெக்னாலஜி குறித்து கற்றுத்தர இஸ்ரேலிட் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இங்கு பி.எச்டி படிக்கும் மாணவர்கள் இஸ்ரேல் சென்று பிஎச்டி செய்ய வாய்ப்பு கிட்டும். இதன் மூலம் இந்தியாவிற்கும், இஸ்ரேலுக்குமான உறவு வலுப்படும் என்று வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் நீ.குமார் கூறினார்.
விவசாயத் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக நேனோ டெக்னாலஜி, சுற்றுச்சூழல் குறித்த ஆய்வு, ரிமோட் சென்சார்(ட்ரோன்) டெக்னாலஜி, நீர்வள தொழில்நுட்பம் குறித்து கலந்துரையாடப்பட்டது.
கோவை டூ ஹைதராபாத்... சுற்றுலா பிரியர்களுக்கு சூப்பர் நியூஸ்!
20 ஆண்டுகளாக இந்தியா, இஸ்ரேலின் தொழில்நுட்பத்தை பின்பற்றி வரும் நிலையில் தற்பொழுது அட்வான்ஸ் டெக்னாலஜியை கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கழிவுநீரை சுத்திகரித்து மீண்டும் அதனை விவசாயம் அல்லது வீடுகளுக்கு பயன்படுத்தும் முயற்சியில் ஒரு மாதிரி செய்யப்பட உள்ளது. இது ஏற்கெனவே இஸ்ரேல் நிறுவனத்தினர் ஊட்டி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் செய்து இருக்கின்றனர். அதனை ஆய்வு செய்து விரிவுப்படுத்த உள்ளோம்.
ட்ரோன் டெக்னாலஜியில் தற்பொழுது நாம் ஆட்களை பயன்படுத்தி சென்சார் மூலம் அதனை பயன்படுத்தி வரும் நிலையில் ஆட்கள் இல்லாமல் பயன்படுத்தும் டெக்னாலஜி பற்றியும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய அளவில் நேனோ டெக்னாலஜி மற்றும் விவசாயத்தில் நமது பல்கலைக்கழகம் சிறந்து விளங்குகிறது.
மேலும் இங்குள்ள ஆசிரியர்களுக்கு இந்த புதிய டெக்னாலஜி குறித்து கற்றுத்தர இஸ்ரேலிட் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இங்கு பி.எச்டி படிக்கும் மாணவர்கள் இஸ்ரேல் சென்று பிஎச்டி செய்ய வாய்ப்பு கிட்டும். இதன் மூலம் இந்தியாவிற்கும், இஸ்ரேலுக்குமான உறவு வலுப்படும் என்று வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் நீ.குமார் கூறினார்.