இதை அடுத்து நடந்த அதிரடி சோதனையில் ஈரானில் இருந்து வந்த இரண்டு கன்டெய்னர்களில் கடத்தி வரப்பட்ட சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 3000 கிலோ ஹெராயின் பிடிபட்டது. இதில் தொடர்புடைய ஆந்திர மாநிலத்தை சேர்ந்த தம்பதியை சென்னையில் கைது செய்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து செய்தி வெளியிட்ட தமிழகத்தை சேர்ந்த கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில், போதை பொருள் கடத்தல் சம்பவம் மோடியின் தயவுடன் நடைபெறுவது போல் செய்தி வெளியிட்டது.
போலீஸ் எஸ்.ஐ பகீர்.. ஆடியோ; கலங்கி கிடக்கும் காவல் துறை!
எனவே பாரத பிரதமர் மோடியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக திட்டமிட்டு பொய் செய்தி வெளியிட்ட கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ் மாநில பாரதிய ஜனதா கட்சியின் பொருளாளர் எஸ்.ஆர் சேகர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
பெண் காவலர்கள் சீருடையில் மாற்றம்; போலீஸ் ஆதரவு சங்கம் நச் கோரிக்கை!
மேலும் பொய் செய்தி வெளியிட்ட கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி மன்னிப்பு கேட்க வேண்டும். அளிக்கப்பட்டுள்ள புகார் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தொண்டர்கள் ஒருசேர வலியுறுத்தியுள்ளனர்.