ஆப்நகரம்

அத்திகடவு – அவினாசி திட்டத்துக்கு ரூ.1500 கோடி டெண்டர் அறிவிப்பு

அத்திகடவு – அவினாசி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ரூ.1,500 கோடி மதிப்பிலான டெண்டர் அறிவிப்பு தமிழக அரசு தரப்பில் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 29 Nov 2018, 11:42 pm

ஹைலைட்ஸ்:

நடப்பு நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கலின்போதும் ரூ.250 கோடி இத்திட்டத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil athikadavu
அத்திகடவு – அவினாசி திட்டத்துக்கு ரூ.1500 கோடி டெண்டர் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
கோவை, திருப்பூர் மாவட்டங்களை இனைக்கும் அவினாசி ஒருகாலத்தில் மிக வறட்சியாக இருந்தது. அவினாசி சுற்றியுள்ள பகுதிகளை வளப்படுத்த பவாணி ஆற்றில் இருந்து வெளியேறும் உபரி நீரை, அவினாசியிலிருந்து, அத்திகடவு வரை உள்ள பகுதிகளுக்கு வழங்கும் திட்டம் தான் இது.

பாசன திட்டம் என்பதை தாண்டி,கால்வாய்கள் மூலம் குளம் ,குட்டை, கண்மாய்களை இந்த உபரி நீர் கொண்டு நிரப்ப வேண்டும் என்பது தான் இதன் முக்கிய நோக்கம்.

பவாணி அணையிலிருந்து 53 டிஎம்சி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இந்த நீரை அவினாசியை சுற்றியுள்ள 2000 கிராமங்களில் உள்ள குளம், குட்டைகளை நிரப்பும் திட்டமாகவும் இது அமையும்.

நடப்பு நிதி ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கலின்போதும் ரூ.250 கோடி இத்திட்டத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ரூ.1,500 கோடி மதிப்பிலான டெண்டர் அறிவிப்பு தமிழக அரசு தரப்பில் வெளியாகியுள்ளது.
இது குறித்து அதிமுக தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில், இத்திட்டம் கொங்கு மண்டலத்தின் 40 வருட கோரிக்கை என்றும் டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது அதிமுக அரசின் மகத்தான சாதனை என்றும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்