ஆப்நகரம்

​தலைக்குப்புற கவிழ்ந்த (சரக்கு) லாரி.. சாலையில் ஓடிய மது வெள்ளம்!

கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் அருகே மதுபானங்கள் ஏற்றிச்சென்ற சரக்கு லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் கவிழ்ந்த விபத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் சாலையில் சிதறி வீணானது.

Samayam Tamil 13 Jun 2022, 10:49 am
கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் அருகே உள்ள கருமத்தம்பட்டி டிப்போ அருகே உள்ள கோவை - கொச்சின் நெடுஞ்சாலையில் மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தில் சென்னை பூந்தமல்லியில் இருந்து பீளமேடு பகுதிக்கு குவாட்டர் பாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது.
Samayam Tamil Coimbatore tasmac liquor


அதிகாலை சுமார் 4 மணி அளவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு லாரி பாலத்தின் தடுப்பு சுவரின் மீது ஏறி சர்விஸ் சாலையில் தலைக்குற கவிழ்ந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக லாரியை ஓட்டி வந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த செல்லப்பன் என்பவர் உயிர் தப்பியுள்ளார்.

சம்பவத்தை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கருமத்தம்பட்டி காவல்துறையினர் செல்லப்பனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

லாரியில் 1,200 பெட்டிகளில் மதுபானங்கள் இருந்துள்ளன. அவற்றின் மதிப்பு 50 லட்சம் ரூபாய் எனத் தெரியவந்துள்ளது. டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு சப்ளை செய்ய எடுத்துச்செல்லப்பட்ட மதுபாட்டில்கள் உடைந்து சாலையில் வெள்ளம் போல் ஓடிய மதுபானங்களை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்துச்சென்றனர்.

அடுத்த செய்தி