ஆப்நகரம்

கோயில் யானை தாக்கி கோவையில் ஒருவர் பலி, அதிர்ச்சி சம்பவம்!

கோயில் வாசலில் தூங்கிக் கொண்டிருந்தவ முதியவரை கோயில் யானை தாக்கியதன் காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

Samayam Tamil 31 Aug 2020, 8:41 pm
கோவில் வளாகத்தில் தூங்கிக் கொண்டிருந்தவர் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தடாகம் சாலை கணுவாயில் ஈஸ்வரன் கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயிலின் வளாகத்தில் உறங்கிக் கொண்டிருந்தவரை இரவு 2 மணியளவில் யானை ஒன்று தாக்கியதாகக் கூறப்படுகிறது. தாக்குதலுக்குப்பின் அவர் எழுந்து நடந்து சென்று அந்த கோயிலின் பாதுகாவலரிடம் தண்ணீர் கேட்டுள்ளார்.

தாக்குதலுக்கு ஆளானவர் அச்சத்துடனே காணப்பட்டுள்ளார். இதையடுத்து தாக்குதலுக்கு ஆளானவர், பாதுகாவலரிடம் அதிகாலை 4 மணி வரை அடிக்கடி தண்ணீர் கேட்டு அருந்தியுள்ளார்.

இதற்கிடையே, 4 மணியளவில் கோயில் பாதுகாவலர் அங்கிருந்து சென்றுவிட்டு சுமார் 5: 30 மணியளவில் மீண்டும் கோவில் வளாகத்திற்குத் திரும்பியுள்ளார். அப்போது, தாக்குதலுக்கு ஆளானவர் அசைவற்று படுத்துக்கிடந்துள்ளார்.

அதிர்ந்துபோன பாதுகாவலர் அவரை பரிசோதித்தபோது, அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து சம்பவம் குறித்து கோயில் பாதுகாவலர் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், போலீசார் உயிரிழந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பழிக்குப் பழி, காவல் நிலையத்தின் மின்சாரத்தைத் துண்டித்து மின் ஊழியர்கள்...

முதற்கட்ட விசாரணையில் அவர் சீரநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த நாகராஜ்(55) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நாகராஜ் உறவினர்களுக்குத் தகவல் கொடுத்து, உயிரிழந்தது நாகராஜ் தானா என்பதை உறுதிசெய்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள தடாகம் போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் யானை தாக்கியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி