ஆப்நகரம்

உங்களுக்கு இந்த தகுதி இருக்கா? அரசு பரிசு உடனே ஒரு லட்சம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு!

நீங்கள் சமூக நீதிக்காகப் பாடுபட்டவராக இருந்தால் அரசிடமிருந்து ரூபாய் ஒரு லட்சம் பரிசு பெறலாம் எனக் கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Samayam Tamil 17 Sep 2021, 10:04 am
கோவை மாவட்ட சமூக நீதிக்குப் பாடுபட்டவர்களைச் சிறப்பிக்கும் “சமூக நீதிக்கான தந்‌தை பெரியார்‌ விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளனர்.
Samayam Tamil உங்களுக்கு இந்த தகுதி இருக்கா? அரசு பரிசு உடனே ஒரு லட்சம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு!


இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு பின்வருமாறு:
சமூக நீதிக்குப் பாடுபட்டவர்களைச் சிறப்பிக்கும் சமூக நீதிக்கான தந்‌தை பெரியார்‌ விருது'' கடந்த 1995ஆம்‌ ஆண்டு முதல்‌ வழங்கப்பட்டு வருகிறது.

சமூக நீதிக்கான தந்‌தை பெரியார்‌ விருது பெறுவோருக்கு ரூ ஒரு லட்சம் விருது தொகையும்‌, ஒரு சவரன்‌ தங்கப்பதக்கமும்‌, தகுதியுரையும்‌ வழங்கப்படுகிறது. இவ்விருதாளர்‌ தமிழ்நாடு முதலமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார்.

2021ஆம்‌ ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின்‌ “சமூக நீதிக்கான தந்தை பெரியார்‌ விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்கப் பரிந்துரைகள்‌ வரவேற்கப்படுகிறது. எனவே, சமூக நீதிக்காகப் பாடுபட்டு, பொது மக்களின்‌ வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள்‌ மற்றும்‌ அதன்‌ பொருட்டு எய்திய சாதனைகள்‌ ஆகிய தகுதிகள்‌ உடையவர்கள்‌ தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சித்‌ தலைவருக்கு விண்ணப்பிக்கலாம்‌.
கோவையில் மீண்டும் எகிறும் கொரோனா... இன்று முதல் ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகள் என்னென்ன?
தங்களது விண்ணப்பம்‌, தங்களின்‌ சுயவிவரம்‌, முழு முகவரி, தொலைப்பேசி மற்றும்‌ சமூக நீதிக்காகப் பாடுபட்‌ட பணிகள்‌ குறித்த விவரம்‌ மற்றும்‌ ஆவணங்கள்‌ உள்ளடக்கியதாக இருத்தல்‌ வேண்டும்‌.

2021ஆம்‌ ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார்‌ விருதிற்கான விண்ணப்பங்கள்‌ மாவட்ட ஆட்சியருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள்‌ 31 அக்டோபர் ஆகும்‌. மேலும் விவரங்களுக்கு அழைக்கலாம். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்‌ மற்றும்‌ சிறுபான்மையினர்‌ நல அலுவலகம், தொலைப்பேசி எண்- 0422 230040.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

அடுத்த செய்தி