கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் மாரத்தான் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டிற்கான 6வது மாரத்தான் போட்டி இன்று நடந்தது. கோயம்புத்தூர் ரன்னர்ஸ் மற்றும் ஷோ ஸ்பேஸ் நிகழ்ச்சிகளுடன் இணைந்து கோயம்புத்தூர் கேன்சர் பவுண்டேசன் (சிசிஎஃப்) நடத்திய மாரத்தான் போட்டியில் கிட்டத்தட்ட 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
மக்களிடையே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது. இதில், வெற்றி பெறுபவர்களுக்கு டிசர்ட், பரிசுத்தொகை மற்றும் பதக்கங்கள் ஆகியவை வழங்கப்படயிருக்கிறது. . 21.1 கிமீ. (அரை மாரத்தான் போட்டியில் ராஜ்குமார் என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.
அரை மாரத்தான் போட்டியில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு முறையே ரூ.25,000, ரூ.15,000 மற்றும் ரூ.10,000 என்று வழங்கப்பட்டுள்ளது. மேலும், 10 கி.மீ மாரத்தான் போட்டியில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு முறையே ரூ.15,000, ரூ.10,000 மற்றும் ரூ.5,000 என்று வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வயது வந்தோருக்கான மாரத்தான் போட்டியில் பாபா என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.
கேன்சர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் மாரத்தான் போட்டி! இதே போன்று 10 கி.மீ தூர மாரத்தான் போட்டியும் நடத்தப்பட்டுள்ளது. இதில், அண்கள், பெண்கள் மற்றும் வயது வந்தோர் என்று தனித்தனியாக நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோயம்புத்தூரில் உள்ள ஜி குப்புசாமி நாயுடு மெமோரியல் மருத்துவமனையில் புற்றுநோய் மையம் கட்டப்பட்டு 27 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இதனை சிறப்பிக்கும் வகையில், சிசிஎஃப் அறக்கட்டளையின் சார்பில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆலோசனை மற்றும் ஆதரவு கொடுக்கும் வகையிலும், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டுள்ளது.
வோடஃபோன் கோயம்புத்தூர் மாரத்தான், தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட தடகள சங்கம் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களிடையே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது. இதில், வெற்றி பெறுபவர்களுக்கு டிசர்ட், பரிசுத்தொகை மற்றும் பதக்கங்கள் ஆகியவை வழங்கப்படயிருக்கிறது. . 21.1 கிமீ. (அரை மாரத்தான் போட்டியில் ராஜ்குமார் என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.
அரை மாரத்தான் போட்டியில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு முறையே ரூ.25,000, ரூ.15,000 மற்றும் ரூ.10,000 என்று வழங்கப்பட்டுள்ளது. மேலும், 10 கி.மீ மாரத்தான் போட்டியில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு முறையே ரூ.15,000, ரூ.10,000 மற்றும் ரூ.5,000 என்று வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வயது வந்தோருக்கான மாரத்தான் போட்டியில் பாபா என்பவர் முதலிடம் பிடித்துள்ளார்.
கேன்சர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவையில் மாரத்தான் போட்டி!
கோயம்புத்தூரில் உள்ள ஜி குப்புசாமி நாயுடு மெமோரியல் மருத்துவமனையில் புற்றுநோய் மையம் கட்டப்பட்டு 27 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இதனை சிறப்பிக்கும் வகையில், சிசிஎஃப் அறக்கட்டளையின் சார்பில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆலோசனை மற்றும் ஆதரவு கொடுக்கும் வகையிலும், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டுள்ளது.
வோடஃபோன் கோயம்புத்தூர் மாரத்தான், தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட தடகள சங்கம் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.