ஆப்நகரம்

இன்று முதல் கோவையும் படம் காட்ட ஆரம்பிச்சிருச்சு...

கோவையில் தமிழ்நாடு அரசு வழங்கிய நோய்த் தடுப்பு பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி திரையரங்குகள் திறக்கப்பட்டன.

Samayam Tamil 10 Nov 2020, 5:12 pm
தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ள நோய்த் தடுப்பு பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றி திரையரங்குகள் அனைத்தும் கோவை மாவட்டத்தில் செயல்படத் தொடங்கியுள்ளது. இதையடுத்து திரையரங்கு செயல்பட அனுமதி அளித்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
Samayam Tamil இன்று முதல் கோவையும் படம் காட்ட ஆரம்பிச்சிருச்சு...
இன்று முதல் கோவையும் படம் காட்ட ஆரம்பிச்சிருச்சு...


எட்டு மாதத்திற்குப் பிறகு திறக்கப்படும் திரையரங்குகளில் புது படங்கள் வெளியாகாத நிலையில் முன்னணி நடிகர்களின் வெற்றிப் படங்கள் மீண்டும் வெளியிடப்படுகின்றன.

கோவையில் கொரோனா தொற்று நோய் பரவல் காலத்தில் முன் களப்பணியாளர்களாக பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், மற்றும் காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள், போன்றோரின் அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாட்டினால் கோவையில் நோய்த்தொற்றுகள் குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. மக்களும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.

வேற லெவல்... மோசடிக்காரர் சொத்துக்கள் 12ஆம் தேதி கோவையில் ஏலம்!

இந்த சூழலில் கொரோனா காலத்தில் முன்னணி களப்பணியில் ஈடுபட்டவர்களைப் பெருமைப் படுத்தும் விதமாகச் செவ்வாய்க் கிழமை முதல் காட்சி அவர்களுக்காகத் திரைப்படம் திரையிடப்பட்டது.

திரையரங்கிற்கு வந்த முன்கள பணியாளர்களைத் திரையரங்கு ஊழியர்கள் கைகளைத் தட்டி உற்சாகத்துடன் வரவேற்றனர். மேலும் அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக சினிமா பாடல்களுக்கு நடனமாடி வரவேற்று திரையரங்கினுள் அழைத்துச் சென்று அமர வைத்தார்கள்.

அடுத்த செய்தி