ஆப்நகரம்

நடுவானில் திடீரென கிளம்பிய கரும்புகை.. அவசர அவசரமாக தரையிறங்கிய விமானம்.. கோவை விமான நிலையத்தில் பரபரப்பு!

கோவை விமான நிலையத்தில் விமானம் ஒன்று கரும்புகையுடன் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 12 Aug 2022, 7:21 pm

ஹைலைட்ஸ்:

  • கோ ஏர்-43 என்ற விமானம்
  • பெங்களூரில் இருந்து 92 பயணிகளுடன் மாலி நாடு நோக்கி சென்ற போது திடீரென ஏற்பட்ட புகை
  • கோவையில் கரும்புகையுடன் அவசரமாக தரையிறக்கப்பட்டது
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
கோவை விமான நிலைத்திற்கு தினந்தோறும் இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில் இன்று காலை கோ ஏர்-43 என்ற விமானம் ஒன்று பெங்களூரில் இருந்து 92 பயணிகளுடன் மாலி நாடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தில் இருந்து திடீரென கரும்புகை எழுந்தது.
இதனால் விமானத்தில் பயணித்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். விமானம் கோவை சுற்றுவட்டாரப்பகுதிக்குள் பறந்து கொண்டிருந்ததால் இங்கிருந்த விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த விமானம் கோவை விமான நிலையத்தில் மதியம் 12.57 மணியளவில் அவசரமாக தரையிரக்கப்பட்டது.

காந்தி சிலையை மறைத்த பிரபல டிவி சீரியல் பேனர்... காந்தியவாதிகள், பொதுமக்கள் குமுறல்!

கோவை விமான நிலையத்திலும் தீயணைப்பு துறையினர் தயாராக இருந்த நிலையில் விமானம் தரையிறங்கியதும் பயணிகள் பத்திரமாக வெளியேறினர். தொடர்ந்து விமானத்தை சோதனை செய்ததில் தீ ஏதும் பிடிக்கப்படவில்லை என உறுதியாகியுள்ளது. தொடர்ந்து மாற்று விமானத்தில் பயணிகள் ஏறினர். இரவு 9 மணியளவில் மாலி நாடு சென்றடைவார்கள் என தகவல் தெரிவித்துள்ளனர்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி