கோவை : சிபிஎஸ்இ ஐந்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் 38ஆயிரம் மரக்கன்றுகளை நட்ட பஸ் கண்டக்டர் குறித்து தகவல்கள் மாணவர்களுக்கு பாடமாக இடம்பெற்றுள்ளது.
கோவையில் வசித்து வருபவர் யோகநாதன் . இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பஸ் கண்டக்டராக பணிப்புரிந்து வருகிறார். இவர் கடந்த 32 ஆண்டுகளாக மரக்கன்றுகளை நட்டு பசுமையையும் சுற்றுசூழலையும் பாதுக்காத்து வருகிறார்.
இவர் குறித்த தகவல்கள் சிபிஎஸ்இ ஐந்தாம் வகுப்பு பொது அறிவு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளாது . அந்த புத்தகத்தில், " இவர் தமிழகத்தைச் சேர்ந்த பஸ் கண்டக்டர். கடந்த 28 ஆண்டுகளில் இவர் தனிநபராக 38ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளார். மேலும் மரக்கன்றுகள் நடுவதன் முக்கியதுவம் குறித்தும், காடுகளை காப்பது குறித்தும் இளைஞர்களிடமும் மாணவர்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து இயற்கையையும், சுற்றுசுழலையும் காக்க சேவையாற்றி வரும் யோகநாதன் தற்போது பள்ளி , கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். மேலும் தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டு வருகிறார்.
கோவையில் வசித்து வருபவர் யோகநாதன் . இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பஸ் கண்டக்டராக பணிப்புரிந்து வருகிறார். இவர் கடந்த 32 ஆண்டுகளாக மரக்கன்றுகளை நட்டு பசுமையையும் சுற்றுசூழலையும் பாதுக்காத்து வருகிறார்.
இவர் குறித்த தகவல்கள் சிபிஎஸ்இ ஐந்தாம் வகுப்பு பொது அறிவு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளாது . அந்த புத்தகத்தில், " இவர் தமிழகத்தைச் சேர்ந்த பஸ் கண்டக்டர். கடந்த 28 ஆண்டுகளில் இவர் தனிநபராக 38ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளார். மேலும் மரக்கன்றுகள் நடுவதன் முக்கியதுவம் குறித்தும், காடுகளை காப்பது குறித்தும் இளைஞர்களிடமும் மாணவர்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து இயற்கையையும், சுற்றுசுழலையும் காக்க சேவையாற்றி வரும் யோகநாதன் தற்போது பள்ளி , கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். மேலும் தொடர்ந்து மரக்கன்றுகளை நட்டு வருகிறார்.