ஆப்நகரம்

குடிபோதையில் புள்ளிங்கோஸ் செஞ்ச வேலைய பாருங்க!

கோவை கணபதி காமராஜபுரத்தில் குடிபோதையில் இருசக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 31 Oct 2020, 6:45 pm
கோவை கணபதி காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் கோபிநாத். இவர் தனது வீட்டின் முன்பாக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.
Samayam Tamil பைக்கை கொளுத்திய புள்ளிங்கோஸ்
கோவையில் பைக்கை கொளுத்திய புள்ளிங்கோஸ்


இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (21), தமிழரசன் (28) உன்னி என்கின்ற பிரவீன் குமார் ( 24) ஆகியோர் மதுபோதையில் அவ்வழியாக வந்துள்ளனர்.

அவர்களுக்கு போதை தலைக்கு ஏறி இருக்கவே, வம்பு எதையாவது விலைக்கு வாங்கியே ஆக வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்தனர்.

நொய்யல் ஆற்றில் குளித்த இருவர் பலி... சடலமாக மீட்பு

அப்போது கோபிநாத்தின் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் அவர்களது கண்ணில் படவே அதனை தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த கோபிநாத் அளித்த புகாரின் அடிப்படையில் சரவணம்பட்டி போலீசார் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி