ஆப்நகரம்

கொரோனா ஒழிய, கோவையில் அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம்!

கொரோனா பரவாமல் இருக்கக் கோவையில் நடந்த வித்தியாசமான பூசை. வேப்ப மரத்திற்கும் அரச மரத்திற்கும் திருமணம்.

Samayam Tamil 31 Dec 2020, 6:19 pm
கோவை துடியலூர் பகுதியில் கொரோனா பரவாமல் இருக்க மக்கள் வினோதமான வழிபாடு நடத்தி வேண்டிக் கொண்டனர். ஆம், அவர்கள் வேப்ப மரத்திற்கும் அரச மரத்திற்கும் திருமணம் செய்து வைத்தனர்.
Samayam Tamil கொரோனா ஒழிய, கோவையில் அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம்!
கொரோனா ஒழிய, கோவையில் அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம்!


இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். கோவை துடியலூர் அடுத்த அப்ப நாயக்கன் பாளையத்தில் நூறு ஆண்டுகளுக்கு மேல் பழமையான கருப்பராயன் கோயில் உள்ளது. இங்குத் தல விருட்சமாக அரச மரமும், வேப்ப மரமும் உள்ளது.

இந்நிலையில் நோய் பரவாமல் இருக்கவும் உலக நன்மை வேண்டியும் கருப்பராயன் கோயிலில் உள்ள வேப்ப மரத்தைப் பெண் கடவுளாகவும், அரசமரத்தை ஆண் கடவுளாகவும் பாவித்து திருமணம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருமாவளவனுக்குச் சேலை கட்டி விடுவேன்: வேலூர் இப்ராகிம் சூளுரை!

அரசமரத்திற்குப் பட்டு வேஷ்டி துண்டும், வேப்பமரத்திற்குப் பட்டுப் புடவை சாற்றி மாலை அணிவித்தனர். புரோகிதர்கள் யாக குண்டம் வளர்த்து வேத மந்திரங்கள் ஓதி திருமணத்தை நடத்தி வைத்தனர்.

பெண்கள் தங்கத் தாலியை மஞ்சள் கயிற்றில் கோர்த்து வேம்பு, அரச மரத்தைச் சுற்றிக் கட்டி மூன்று முடிச்சு போட்டு தாலி போல் அதைக் கட்டினர். இதில் கலந்து கொண்ட பெண்களுக்கு வளையல் மற்றும் மஞ்சள் கயிறு வழங்கப்பட்டது.

அடுத்த செய்தி