மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு “வர்ண முறைகள்” என்ற தலைப்பில் சாதிய வேறுபாடுகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. சூத்திரரர்கள், பஞ்சமர்கள் யார்? அவர்கள் உண்ணும் உணவு? உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு மக்களிடம் பிளவுகள் ஏற்படுத்தும் வகையில் பாடம் கற்பிக்கப்படுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மத்திய அரசை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. கண்டன அறிக்கைகள் வெளியிட்டு கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது வர்ணாசிரமப் பாடம் இடம்பெற்றுள்ள பாடப்பிரிவை கிழித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன், மத்திய அரசால் நடத்தப்படுகிற சிபிஎஸ்இ 6ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் வர்ணாசிரம முறை என்ற பெயரிலேயே பிராமணர்கள் யார்? சூத்திரர்கள் யார்?
பஞ்சமர்கள் என்று சொல்லப்படுகிற தலித்கள் யார்? என்று படத்துடன் விளக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மனதில் சாதி வெறியை, இன வெறியை தூண்டும் வகையில் பாடத்திட்டத்தை கொடுத்துள்ளனர். அதில் பிராமணர்கள் என்பவர்கள் உயர் சாதியினர். கல்வி கற்க உரிமை பெற்றவர்கள். சூத்திரர்கள் என்பவர்கள் பிராமணர்களுக்கு அடிமை வேலை செய்பவர்கள். படிப்பதற்கு தகுதி அற்றவர்கள். ஊருக்கு வெளியே வாழக்கூடியவர்கள். அழுக்கு படிந்தவர்கள்.
இவர்களின் வேலையே இறந்த விலங்குகளை அறுப்பதும், உண்பதும் தான் என்று இழிவுபடுத்தியுள்ளனர். இத்தகைய பாடத்திட்டம் தான் தற்போது நடைமுறையில் இருந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு செய்தால் மாணவர்கள் மனதில் எப்படி சமத்துவம் பிறக்கும் என்று கேள்வி எழுப்பினார். பொதுமக்களிடையே நியாயம் கேட்பதற்கு அண்ணாமலை விரைவில் கோவை வரவுள்ளார். அவர் முதலில் சிபிஎஸ்இ பாடத்திட்ட விவகாரத்தில் போராட்டம் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருட்டிணன், மத்திய அரசால் நடத்தப்படுகிற சிபிஎஸ்இ 6ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் வர்ணாசிரம முறை என்ற பெயரிலேயே பிராமணர்கள் யார்? சூத்திரர்கள் யார்?
பஞ்சமர்கள் என்று சொல்லப்படுகிற தலித்கள் யார்? என்று படத்துடன் விளக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மனதில் சாதி வெறியை, இன வெறியை தூண்டும் வகையில் பாடத்திட்டத்தை கொடுத்துள்ளனர். அதில் பிராமணர்கள் என்பவர்கள் உயர் சாதியினர். கல்வி கற்க உரிமை பெற்றவர்கள். சூத்திரர்கள் என்பவர்கள் பிராமணர்களுக்கு அடிமை வேலை செய்பவர்கள். படிப்பதற்கு தகுதி அற்றவர்கள். ஊருக்கு வெளியே வாழக்கூடியவர்கள். அழுக்கு படிந்தவர்கள்.
இவர்களின் வேலையே இறந்த விலங்குகளை அறுப்பதும், உண்பதும் தான் என்று இழிவுபடுத்தியுள்ளனர். இத்தகைய பாடத்திட்டம் தான் தற்போது நடைமுறையில் இருந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு செய்தால் மாணவர்கள் மனதில் எப்படி சமத்துவம் பிறக்கும் என்று கேள்வி எழுப்பினார். பொதுமக்களிடையே நியாயம் கேட்பதற்கு அண்ணாமலை விரைவில் கோவை வரவுள்ளார். அவர் முதலில் சிபிஎஸ்இ பாடத்திட்ட விவகாரத்தில் போராட்டம் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.