ஆப்நகரம்

ஓடும் டிராக்டரில் ஏற முயன்ற 10 வயது சிறுவன் உடல் நசுங்கிப் பலி!

கோவையில் வயல் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது 10 வயது சிறுவன் பரிதாபமாக டிராக்டரில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...

Samayam Tamil 2 Dec 2020, 1:53 pm
கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் வனப் பத்தரகாளியம்மன் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள, சமயபுரத்தை அடுத்த கூடுதுறை மலைப் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ. கூலித்தொழிலாளி. இவர் மகன் விஜய். வயது 10.
Samayam Tamil ஓடும் டிராக்டரில் ஏற முயன்ற 10 வயது சிறுவன் உடல் நசுங்கிப் பலி!
ஓடும் டிராக்டரில் ஏற முயன்ற 10 வயது சிறுவன் உடல் நசுங்கிப் பலி!


விஜய் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்தார். கூடுதுறை மலையை ஒட்டிய நெல்லித்துறையில், உள்ள தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் நேற்று வாழை நடவு செய்யும் பணி மேற்கொள்ளப்பட இருந்தது.

இதற்கான முன்னேற்பாடு உழவுப் பணிக்காக இளங்கோவுக்குத் தெரிந்த லோககேஷ்குமார் என்பவர், அந்த தோட்டத்தில் டிராக்டர் ஓட்டச் சென்றார்.

அப்போது விஜய், அவரது தந்தை இளங்கோ ஆகியோரும் டிராக்டரில் தோட்டத்துக்குச் சென்றனர். உழவுப் பணியை மேற்கொள்ளும் போது விஜயை டிராக்டரில் இருந்து இறக்கி விட்டனர். அவர் வரப்பு ஓரமாக அமர்ந்திருந்தார்.

கெஞ்சும் பெண்ணை, அடிக்கும் இந்து முன்னணி நிர்வாகி: வீடியோ வைரலாகி வருகிறது!

சிறிது நேரத்தில் விஜய், ஓடிக் கொண்டிருந்த டிராக்டரில் ஏற முயன்றார். அப்போது விஜய் தவறி டிராக்டரின் பின்னால் உழவுப் பணிக்காகப் பொருத்தப்பட்டிருந்த ரொட்டேட்டர் கருவியில் விழுந்தார். தொடர்ந்து கீழே விழுந்த விஜய் மீது டிராக்டரின் சக்கரமும் ஏறியது.

இந்த விபத்து காரணமாக படுகாயங்களடைந்த சிறுவர் விஜய் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். சிறுவர் உயிரிழப்பு தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி