ஆப்நகரம்

சமயம் தமிழ் செய்தி எதிரொலி: படிப்பைத் தொடரும் மாணவி... புத்துயிர் பெற்ற கிராமம்

சாதிச் சான்றிதழ் இல்லாததால் மருத்துவப்படிப்பில் சேர முடியாமல் தவித்து வந்த கோவைப் பழங்குடி மாணவிக்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 17 May 2020, 7:44 pm
Samayam Tamil tribal student received her community certificate in coimbatore
சமயம் தமிழ் செய்தி எதிரொலி: படிப்பைத் தொடரும் மாணவி... புத்துயிர் பெற்ற கிராமம்
சாதிச் சான்றிதழ் இல்லாததால் மருத்துவப்படிப்பில் சேர முடியாமல் தவித்து வந்த கோவைப் பழங்குடி மாணவிக்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், சாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் திருமலையாம்பாளையம் அருகேயுள்ள ரொட்டி கவுண்டன் புதூர் பகுதியில் மலசர் பழங்குடி மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி அவதியுறுவதை பற்றியும், சங்கவி என்ற பனிரெண்டாம் வகுப்பு படித்த மாணவி சாதி சான்றிதழ் இல்லாததால் மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை குறித்தும் சமயம் தமிழ் செய்தி வெளியிட்டது.

சாதி சான்றிதழ் இல்லை... கிராமத்தின் முதல் மருத்துவ மாணவிக்கு தடங்கல்

அந்த மாணவியின் நிலை குறித்து அவர் சமயம் தமிழுக்கு அளித்த பேட்டி:


இதனைத்தொடர்ந்து மாணவி சங்கவிக்கு மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி உத்தரவின் பேரில், மதுக்கரை வருவாய் வட்டாட்சியர் சரண்யா இன்று சாதி சான்றிதழை வழங்கினார்.



ஏற்கனவே ஹிந்துஸ்தான் சாரணர் மற்றும் சாரணியர் இயக்கத்தினர் மாணவி சங்கவிக்கு 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கியதோடு, தற்போது நீட் பயிற்சி மற்றும் மருத்துவ படிப்பிற்கான செலவை ஏற்று கொள்வதாக உறுதியளித்துள்ளது.

மலசர் பழங்குடியினர் வாழும் கிராமமான இந்த ரொட்டிகவுண்டன் புதூரில் இதுவரை அடிப்ப்டை வசதிகளும் சரியாக செய்து தரப்படவில்லை. இந்நிலையில், அப்பகுதியில் பல மாதங்களாக திறக்கப்படாத கழிப்பறையை திருமலையாம்பாளையம் பேரூராட்சி நிர்வாகம் திறந்துள்ளது.

இத்துடன் மற்ற மலசர் பழங்குடிகளுக்கும் குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், சாலை வசதி உள்ளிட்டவை செய்து தர மாவட்ட நிர்வாகம் பணிகளை தற்போது மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது

அடுத்த செய்தி