ஆப்நகரம்

65 கோடி மோசடி... இன்னும் ரெண்டு பேர் கைது!

கோவையில் நிதி நிறுவனம் நடத்தி 65 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் மேலும் இருவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 24 Nov 2020, 10:13 pm
கோவை ராமநாதபுரம் அருகே உள்ள கிருஷ்ணசாமி நகரில் ஆன்லைன் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களாக சென்னையைச் சேர்ந்த மணிகண்டன், அவரது மனைவி பத்மாவதி, மகள் சரண்யா, சஞ்சய்குமார், சீனிவாசன், கார்த்திகேயன், ஆகியோர் இருந்து வந்தனர்.
Samayam Tamil நிதி நிறுவன மோசடி
மோசடி வழக்கில் இளம் பெண் கைது


இவர்கள் வாடிக்கையாளர்களிடம் தங்கள் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு தொகையை திருப்பித் தருவதாக கூறியுள்ளனர். இதனை நம்பி ஏராளமானோர் நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

ஆனால் அவர்கள் கூறியபடி, பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ரூ 65 கோடி மோசடி செய்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் இதுகுறித்து கோவை பொருளாதார குற்றப்பிரிவில் புகார் செய்தனர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பங்குதாரர்களான மணிகண்டன், சஞ்சய் குமார், ஆகியோரை கைது செய்தனர்.

அடப்பாவிகளா... இவ்வளவு டன் ரேஷன் அரிசி பதுக்கலா?

மேலும் தலைமறைவாக இருந்த மணிகண்டனின் மனைவி பத்மாவதி, மகள் சரண்யா, சீனிவாசன், கார்த்திகேயன் ஆகியோரை தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசார் பத்மாவதி, அவரது மகள் சரண்யா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள சீனிவாசன் கார்த்திகேயன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி