ஆப்நகரம்

பன்றிக் காய்ச்சலுக்கு ஒரே நாளில் இருவர் பலி; கோவையில் பொதுமக்கள் அச்சம்!

கோவை: பன்றிக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக இருவரு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 2 Dec 2018, 8:39 pm
தமிழகத்தில் பருமழை காலங்களில் பல்வேறு காய்ச்சல் பாதிப்புகள் வரத் தொடங்கி விடுகின்றன. தற்போது கோவை, மதுரை போன்ற பகுதிகளில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகம் உள்ளன. கோவையில் இன்று ஒரே நாளில் இரு முதியவர்கள் பன்றி காய்ச்சல் பாதிப்பிற்கு பலியாகியுள்ளனர்.
Samayam Tamil Swine-flu


கோவை அருகே போத்தனூர் பாரதி நகரைச் சேர்ந்த வேலாயுதம்(65). இவர் பன்றி காய்ச்சல் பாதிப்பு காரணமாக, கடந்த நவம்பர் 11ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

இதேபோல் கோவை நிலம்பூர் அண்ணா நகரைச் சேர்ந்த பழனிசாமி(61). இவர் பன்றி காய்ச்சல் பாதிப்பு காரணமாக, கடந்த நவம்பர் 30ஆம் தேதி, கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்,

பன்றி காய்ச்சல் 21,

டெங்கு காய்ச்சம் 4,

வைரஸ் காய்ச்சல் 60,


என மொத்த 85 பேர் உயிரிழந்துள்ளனர். இது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி