ஆப்நகரம்

நடுரோட்டில் பின்னிக்கொண்ட இரு பாம்புகள்..! அதிசய காட்சி என ஆர்வத்துடன் கண்டுகளித்த பொதுமக்கள்...

திருப்பூர் மாவட்ட பல்லடம் அருகே ஆவர பாளையத்தில் சாரை, நாகப் பாம்பு இரண்டும் பின்னிப்பிணைந்த அதிசய காட்சியை ஆர்வத்துடன் கண்டுகளித்த பொதுமக்கள்.

Samayam Tamil 6 Jul 2020, 3:40 pm
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கரைப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட அவரப் பாளையத்தில் குடியிருப்புகளுக்கு மத்தியில் புகுந்த சாரை மற்றும் நாகப்பாம்பு ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியை சுற்றி சுற்றி வந்த காட்சி பொது மக்களுக்கு இடையே பரபரப்பையும் வீதியையும் ஏற்படுத்தியது.
Samayam Tamil snake spotted in coimbatore


இதனை துணிச்சலாக அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து அதனை வாட்ஸ்அப் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மேலும் பாம்புகள் பின்னிப் பிணைந்து அந்த காட்சியை அப்பகுதியினர் மிகுந்த பயத்துடனும், படபடப்புடன் கண்டு இந்த அதிசயத்தை ரசித்தனர்.

கோவை: மருத்துவர்கள் இல்லை... ஆட்டோவிலேயே பிரசவம் நடந்த அவலம்

சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பின்னர் பாம்புகள் இரண்டும் எங்கோ சென்று மறைந்து விட்டன. பொதுவாக சாரை மற்றும் நாக பாம்புகள் ஒன்றொடுன்று பின்னிகொள்ளும் நிகழ்வினை, அவைகள் உடலுறவு கொள்வதாக மக்களிடையே உள்ள நம்பிக்கை. ஆனால், அறிவியல் ரீதியாக அது முற்றிலும் தவறு என கூறப்படுகிறது.

அடுத்த செய்தி