ஆப்நகரம்

கோவையில் 2 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை: 52 வயது காமுகன் கைது

கோவையில் 2 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்த 52 வயது நபரை போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 16 Aug 2020, 9:47 pm
கோவையில் 26வயது பெண் ஒருவர் தனது கணவரை பிரிந்து தனியாக தனது 2 வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். பணிக்கு செல்வதால், தனது பெண் குழந்தையை பார்த்துக்கொள்ள வீட்டின் அருகில் வசிக்கும் பெண் ஒருவரை ரூ.3000 பணிக்கு அமர்த்தியுள்ளார்.
Samayam Tamil கைது செய்யப்பட்டுள்ள சக்திவேல்
கைது செய்யப்பட்டுள்ள சக்திவேல்


இந்நிலையில், கடந்த 13ஆம் தேதி குழந்தையை பார்த்துக்கொள்ளும் அப்பெண் வெளியூர் சென்றதால், அவரது வீட்டில் விட்டு விட்டு பணிக்கு சென்றுள்ளார். மீண்டும் வந்து குழந்தையை பெற்றுக்கொள்ளும் போது, உடலில் காயங்களுடன், கண்கள் வீங்கியும், உடல்நலம் பாதிக்கப்பட்டும் இருந்தததால், கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குழந்தையை சிகிச்சைக்காக அவரது தாய் அனுமதித்துள்ளார்.

குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதை உறுதி செய்தனர். இத்தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய், சரவணம்பட்டி காவல் நிலையத்தில் சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார்.

கோவையில் சிறுமி கடத்தல்! 5 மாதங்கள் கழித்து வந்த தகவல்... பெற்றோர் கண்ணீர்

புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், குழந்தையை பார்த்துக்கொள்ள விட்டு வந்த வீட்டில் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதையும், குழந்தையை பார்த்துக்கொள்ளும் பெண்ணான தேவி என்பவரின் கணவர் மற்றும் அவரது மகள் வீட்டிலிருந்ததை உறுதி செய்தனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில்,தேவியின் கணவரான ராமுவின் நண்பர் சக்திவேல் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. ராமு வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் சக்திவேல், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, சக்திவேலை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

அடுத்த செய்தி