ஆப்நகரம்

இதை விட அசிங்கமா போஸ்டர் அடிக்க எங்களுக்கும் தெரியும் : உதயநிதி ஸ்டாலின் பேச்சு

“அடுத்த முறை போஸ்டர் ஒட்டினால் கிழிக்க மாட்டோம் எனவும் , அதன் மீதே வேறு போஸ்டர் ஒட்டுவோம் எனவும் தெரிவித்தார்.

Samayam Tamil 27 Oct 2020, 2:13 pm
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக வின் அராஜக ஆட்சியை கண்டித்து திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பபட்டன.
Samayam Tamil Udhayanithi DMK - File Pic


இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “இந்த போராட்டம் வெறும் போஸ்டர் ஒட்டியதற்கான போராட்டம் மட்டும் கிடையாது என்று தெரிவித்தார். கோவையில் வேலுமணி அடிக்காத கொள்ளை கிடையாது, அந்த அளவிற்கு அனைத்திலும் கொள்ளையடித்து இருக்கின்றார் எனவும், தேர்தலில் மக்கள் அவருக்கு துரத்தி துரத்தி சாவு மணி அடிக்க போகின்றனர்” என தெரிவித்தார்.

மேலும், “பெயரைப் போட்டு போஸ்டர் அடிக்கக் கூட தைரியமில்லாதவர் வேலுமணி எனக் கூறிய அவர், இதை விட அசிங்கமாக , சிறப்பாக எங்களுக்கும் போஸ்டர் அடிக்க தெரியும் என தெரிவித்தார். அத்துடன் “அடுத்த முறை போஸ்டர் ஒட்டினால் கிழிக்க மாட்டோம் எனவும் , அதன் மீதே வேறு போஸ்டர் ஒட்டுவோம் எனவும் தெரிவித்தார்.

ரோடு உடைந்து சப்வேக்குள் சென்ற லாரி: 20 அடி பள்ளம்!

குனியமுத்தூர் காவல் நிலையத்தில் போராட்டம் நடத்த திட்டமிட்டபோது அதற்கு அனுமதி மறுத்து , தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு காவல் அனுமதி கொடுத்தனர் எனவும் , ஆனால் காலையில் அனுமதி மறுத்துள்ளனர் எனக் கூறிய உதயநிதி, கைதுக்கு தயாராகத் தான் மேடைக்கு வந்தேன் எனவும் தெரிவித்தார்.

திமுக தலைவரும் இங்கே போராட்டம் நடத்த வருவதாக சொன்னவுடன், போஸ்டரை கிழித்தற்காக கைது செய்யப்பட்ட திமுகவினர் காவல் துறையினர் உடனடியாக விடுவிக்கப்பட்டனர் என தெரிவித்த அவர்,
மேஜைளுக்கு அடியில் ஊர்ந்து சென்று முதல்வர் பதவியை பிடித்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும்
இப்போது யார் முதல்வர் என்பதே தெரியவில்லை என கூறினார்.

எடப்பாடியின் நிழல் முதல்வராக எஸ்.பி.வேலுமணி இருக்கின்றார் தமிழகத்தில் போராட்டம் நடைபெறுவதற்கு முன் காவல்துறையினர் போராட்டத்திற்கு அனுமதி மறுத்து பேனரை அகற்றியதால் காவல்துறையினருக்கும் திமுக வினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்ப்பட்டது. அடிமை ஆட்சி நடைபெற்று கொண்டு இருக்கின்றது என தெரிவித்தார்.

அடுத்த செய்தி