ஆப்நகரம்

எரிந்த நிலையில் வாலிபர் சடலம்: கோவை அருகே அதிர்ச்சி சம்பவம்

கோவை அருகே எரிந்த நிலையில் கிடந்த நபரின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 13 May 2020, 12:51 am
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அடுத்து பாலமலை செல்லும் பகுதியில் நாயக்கன்பாளையம் கிராமம் உள்ளது. இந்தப் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை ஆடு மேய்ப்பதற்காக சீனிவாசன் என்பவர் சென்றுள்ளார். அப்போது பாலமலை சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலத்தின் கீழ் துர்நாற்றம் வந்துள்ளது.
Samayam Tamil police


இதனையடுத்து அங்கு சென்று பார்த்தபோது பாதி எரிந்த நிலையில் வாலிபர் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசுக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில் தலை துண்டிக்கப்பட்ட அந்த வாலிபரின் உடல் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது .

போலீஸ் தடை போட்டபோதும் அடங்கவில்லை, கோவையில் போராட்டத்தால் பரபரப்பு!

உயிரிழந்த வாலிபருக்கு 35 வயது இருக்கலாம் என போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலை செய்யப்பட்டவர் யார், எந்த பகுதியை சார்ந்தவர் என விசாரித்து வருகின்றனர். இதனையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெரியநாயக்கன்பாளையம் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் மணி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . ஊரடங்கு உத்தரவு நீடித்துவரும் நிலையில் இந்த கொலை நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி