ஆப்நகரம்

கொரோனா காலத்திலும் நம்ம பசங்க படிப்பு வீண் போகவில்லை... மத்திய அமைச்சர் பெருமிதம்!

ஆன்லைன் கல்வியால் கொரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டபோதும் இந்த கல்வியாண்டு வீணாகவில்லை என்று மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 22 Jan 2021, 11:59 pm
கோவை, அவினாசி லிங்கம் பல்கலைக்கழகத்தின் 32 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தாண்டு அனைத்து மாணவிகளும் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை.
Samayam Tamil மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்


மாறாக முனைவர் பட்டம் பெறுவோர் மற்றும் பல்கலைக்கழக அளவில் பதக்கங்களை பெற்ற 166 பேர் மட்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

விழாவில் மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கலந்து கொண்டு மாணவிகள் மத்தியில் இந்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

காலையிலேயே வெளுத்து வாங்கிய மழை...கோவை மக்கள் ஹேப்பி!

சுவாமி விவேகானந்தர் கூறியது போல் பறவைகளுக்கு இரண்டு இறக்கையும் வளர வேண்டும் அப்போது தான் பறக்கும். அதே போல் ஆண்களுக்கு கிடைக்கும் போல் பெண்கள் கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.இருபாலரும் கல்வி கற்றால் தான் நாடு முன்னேற்ற பாதையில் செல்லும்.

நான் பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு செல்லும்போதும் பெண்கள் நல்ல மதிப்பெண்கள் பெறுவதை பார்க்கிறேன். இது மகிழ்ச்சியளிக்கிறது. இதில் அவினாசி லிங்கம் பல்கலைக்கு பெரும் பங்கு உள்ளது.

இந்தியாவில் 1000 பல்கலைக்கழகங்கள் உள்ளன. 16 முதல் 17 லட்சம் பள்ளிகள் உள்ளன. மொத்தம் 33 கோடி மாணவர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை அமெரிக்க மக்கள் தொகைக்கு சமமானது.

ராட்சத பேனர்களால் மக்களை பயமுறுத்தும் அதிமுக...

கொரோனா காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டபோதும் இந்த கல்வியாண்டு வீணாகவில்லை. தேர்வுகளும் தடையின்றி நடத்தப்பட்டுள்ளது. இத்தனை கோடி மாணவர்களுக்கும் ஆன்லைன் மூலம் கல்வி கொடுத்தது இந்தியாவின் சாதனை என்று ரமேஷ் பொக்ரியால் கூறினார்.

விழாவில் அவினாசி லிங்கம் பல்கலைக்கழகம் சார்பில் மத்திய அமைச்சருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பல்கலைக்கழக வேந்தர் தியாகராஜன், துணைவேந்தர் பிரேமாவதி விஜயன், நிர்வாக அறங்காவலர் மீனாட்சி சுந்தரம், பதிவாளர் கவுசல்யா, பேராசியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி