ஆப்நகரம்

பிரதமர் கூட்டத்தில் 5 லட்சம் பேர் கூடுவார்கள்... ஏற்பாடுகளை விவரிக்கும் வானதி சீனிவாசன்

கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொது கூட்டத்தில் 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 23 Feb 2021, 10:48 pm
நாளை மறுதினம் கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி அங்கு பொதுமக்களிடையே உரையாற்றுகிறார். அதன் முன்னதாக கொடிசியா அரங்கில் நடைபெறும் அரசு நிகழ்வில் கலந்துக்கொண்டு பல்வேறு திட்டங்களை துவக்கி வைக்கிறார்.
Samayam Tamil vanathi inaugurates rally.


இதனையொட்டி பாரத பிரதமரை வரவேற்கும் விதமாக பாஜக மகளிர் அணியினர் இன்று இருசக்கர வாகன பேரணியை நடத்தினர். கோவை புலியகுளம் விநாயகர் கோவில் அருகே துவங்கிய இந்த பேரணியை பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார். இந்த பேரணியானது லட்சுமி மில்ஸ் சந்திப்பு, காந்திபுரம், சிவானந்தகாலனி, சாய்பாபா கோவில் வழியாக டவுன்ஹாலில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவிலில் நிறைவடைகிறது. இந்த இருசக்கர வாகன பேரணியில் 63 மகளிரணியினர் கலந்து கொண்டனர்.


முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன் பிரதமரை வரவேற்கும் விதமாகவும் மகளிர் அதிகம் கலந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இந்த இரு சக்கர வாகன பேரணி நடைபெறுவதாக தெரிவித்தார். வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பாரத பிரதமர் கலந்துக்கொள்ளும் முதல் பிரச்சார கூட்டம் இது என்று கூறிய அவர் சேலம் முதல் நீலகிரி வரை மேற்கு மாவட்டங்களை சேர்ந்த ஐந்து லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்று தெரிவித்தார்.

தனிமையில் வாடுவோருக்கு தனி அமைச்சர்.. பிரதமர் அதிரடி அறிவிப்பு!

பெண்கள் தனியாக அமத்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இளம் பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டுவதாக வானதி சீனிவாசன் தெரிவித்தார். மேலும், அவர் இதை ஒரு ஆரோக்கியமான விஷயமாக பார்ப்பதாக தெரிவித்தார். கடந்த முறை போல் அல்லாமல் இந்த முறை காவல்துறையினருடன் பேசி அனைவரும் மேடைக்கு எளிதாக வரக்கூடிய வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு என்று தனி அனுமதி சீட்டு, சமுதாய தலைவர்கள் அமர்வதற்கான இருக்கைகள் என முழுமையாக திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

அடுத்த செய்தி