ஆப்நகரம்

கோவை சித்தி விநாயகர் கோயில் ஏடிஎம்மில் கொள்ளை பணிபோது அடித்த அலாரம்... அடுத்து என்ன?

கோவையில் ஏடிஎம் மையத்திற்குள் கொள்ளையடிக்கப் புகுந்த மர்ம நபர்கள் தொடர்பாக வெளியாகியுள்ள சிசிடிவி புகைப்படம் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

Samayam Tamil 21 Sep 2021, 12:56 pm
கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தைக் கொள்ளையடிக்க வந்த மர்ம நபர்களின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
Samayam Tamil கோவை சித்தி விநாயகர் கோயில் ஏடிஎம்மில் கொள்ளை பணிபோது அடித்த அலாரம்... அடுத்து என்ன?


கோவை வெள்ளலூர் சித்தி விநாயகர் கோவில் அருகில் கனரா வங்கி செயல்பட்டு வருகிறது. அருகிலேயே அதன் ஏடிஎம் மையமும் உள்ளது.

இந்தச்சூழலில் கடந்த 19ஆம் தேதி அதிகாலையில் இந்த ஏடிஎம் இயந்திரத்தில் மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது ஏடிஎம் மையத்திலிருந்து அலாரம் சத்தம் ஒலித்துள்ளது. இதையடுத்து சுதாரித்துக்கொண்ட கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
கோவை கலெக்டர் செய்த சிறப்பான சம்பவம்... குடிநீருக்காக இப்படி ஒரு செயல்!
பின்னர் பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போத்தனுர் போலீசார் கொள்ளை முயற்சி நடந்த இடத்தை பார்வையிட்டனர்.

இதில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் ஸ்ப்ரே அடித்ததும், மையத்திற்குள் மிளகாய்ப்பொடி தூவியும் சென்றுள்ளது தெரியவந்ததுள்ளது.

தொடர்ந்து போலீசார் மற்ற சிசிடிவிகளையும் ஆய்வு செய்ததில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து வீடியோவில் உள்ளவர்களின் புகைப்படங்களை வைத்து போலீசார் தனிப்படை அமைத்துத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி