ஆப்நகரம்

கோவை: 108 ஆம்புலன்சில் பிறந்த குழந்தை: அதிரடி சம்பவங்கள்!

கோவையில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவசரம் உணர்ந்து பிரசவம் பார்த்ததில் தாயும் சேயும் நலமாக மீட்கப்பட்டனர்.

Samayam Tamil 11 Jun 2021, 5:53 pm
கோவை மாவட்டம் வெள்ளலூர் ஹவுசிங் யூனிட்டில் வசித்து வருபவர் சபானா(20). நிறைமாத கர்ப்பிணியான இவர் அதிகாலை பிரசவ வலியால் துடித்து உள்ளார். இதைத் தொடர்ந்து அவரது கணவர் 108 ஆம்புலன்ஸிர்க்கு அழைத்துள்ளார்.
Samayam Tamil கோவை: 108 ஆம்புலன்சில் பிறந்த குழந்தை: அதிரடி சம்பவங்கள்!


தகவல் அறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கர்ப்பிணிப் பெண் சபானாவை ஹவுசிங் யூனிட் மேல் தளத்திலிருந்து ஆம்புலன்ஸுக்கு கொண்டு வந்து கொண்டிருந்தனர். அப்போது அதிக வலியால் துடித்த கர்ப்பிணிக்கு ஆம்புலன்ஸில் வைத்து பிரசவம் பார்க்கும் சூழல் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அவசரம் உணர்ந்த இஎம்டி பிரதாப் மற்றும் பைலட் அந்தோணி கர்ப்பிணிப் பெண்ணுக்குப் பிரசவம் பார்த்தனர். இதில் அப்பெண்ணிற்கு ஆண் குழந்தை பிறந்தது. அதேபோல தாயும் சேயும் நலமாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கோவையில் 3ஆவது அலை தொடங்கியது வாட்ஸ்-அப் செய்தியைப் பரப்பினால் ஜெயில்: அரசு எச்சரிக்கை!
அவசரம் உணர்ந்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பிரசவம் பார்த்ததில் ஆண் குழந்தை நலமுடன் பிறந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

அடுத்த செய்தி