ஆப்நகரம்

நாளும் கிழமையிலும் பணியாற்றுவோருக்கு துளசி செடி பரிசு... அசத்தும் தன்னார்வலர்கள்!

தீபாவளி பண்டிகை விடுமுறையில் பணியாற்றும் போக்குவரத்து, தீயணைப்பு, காவல் துறையினர் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளில் சேவையாற்றுவோருக்கு கோவை பேருந்து நிலையத்தில் தீபாவளி இனிப்புகளுடன் துளசி செடிகளையும் கொடுத்து தன்னார்வலர்கள் அசத்தினர்.

Samayam Tamil 14 Nov 2020, 3:50 pm
தீபாவளி போன்ற பண்டிகை கால நேரங்களிலும் பணிகளில் ஈடுபடும் போக்குவரத்துத் துறை ஓட்டுனர்கள், நடத்துனர்கள், காவல் துறையினர் ,தீயணைப்பு துறையினர், மாநகராட்சி பணியாளர்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பணியில் ஈடுபடுவோர், தங்கள் குடும்பத்துடன் பண்டிகை கொண்டாட முடியாத நிலை உள்ளது.
Samayam Tamil உக்கடம் பேருந்து நிலையம்
அத்தியாவசிய பணிகளில் இருப்போருக்கு கௌரவம்


சம்பளத்தை தாண்டி, அர்ப்பணிப்பு உணர்வுடன்கூடிய இவர்களது சேவைய கௌரவிக்கும் விதத்திலும், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் 'பசுமை தேசம்', குறிச்சி இண்டஸ்ட்ரியல் அரிமா சங்கம், வேர்ல்டு மலையாளி ஃபெடரேஷன் ஆகிய தன்னார்வ அமைப்புகள் இணைந்து,.உக்கடம் பேருந்து நிலையத்தில் பஸ் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு இனிப்பு, காரம் பாக்கெட்களை வழங்கியுடன், அவர்களுக்கு துளசி செடியையும் வழங்கி ஊக்கப்படுத்தினர்.

இதேபோல உக்கடம் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்களுக்கும் இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மதுபாட்டிலில் ஓவியம்... கொரோனா லாக்டவுனில் தொழிலதிபரான இல்லத்தரசி!

உக்கடம் பஸ் ஸ்டாண்ட்டில் நின்ற அனைத்து பஸ்களிலும் சலிக்காமல் ஏறி இறங்கி, அனைத்து ஓட்டுனர், நடத்துனர்களுக்கும் இவற்றை வழங்கி அவர்களை உற்சாகப்படுத்திய தன்னார்வலர்களை செயலை பயணிகள் வெகுவாக பாராட்டினர்.

அடுத்த செய்தி