கேரளா,நீலகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் பில்லூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அணையின் மொத்த கொள்ளளவான 100 அடியில் 97 அடியை எட்டியதால் அணையின் பாதுகாப்புக்கருதி ஏற்கெனவே நான்கு மதகுகளின் வழியாக வினாடிக்கு 14 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக நீரின் அளவு குறைக்கப்பட்டது.
இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக அணைக்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்ததால் மீண்டும் வெளியேற்றும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டது.
இன்று காலை 6 மணி நிலவரப்படி பில்லூர் அணையிலிருந்து பவானியாற்றில் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கணக்கெடுப்பிற்கு வந்தப் பெண்ணை சாதி வெறியில் சிறை பிடித்த கோவை ஆட்டோ டிரைவர்!
இதனால் 2 வது நாளாக இன்றும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பவானியாற்றில் ஆற்றங்கரையோரத்தில் உள்ள தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி வருவாய் துறையினர் மற்றும் மேட்டுப்பாளையம் காவல் துறையினர் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்திலிருந்து தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுவினை சேர்ந்த 45 பேர் கோவைக்கு வரவழைக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளனர்.
இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக அணைக்கு வரும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்ததால் மீண்டும் வெளியேற்றும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டது.
இன்று காலை 6 மணி நிலவரப்படி பில்லூர் அணையிலிருந்து பவானியாற்றில் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கணக்கெடுப்பிற்கு வந்தப் பெண்ணை சாதி வெறியில் சிறை பிடித்த கோவை ஆட்டோ டிரைவர்!
இதனால் 2 வது நாளாக இன்றும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பவானியாற்றில் ஆற்றங்கரையோரத்தில் உள்ள தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி வருவாய் துறையினர் மற்றும் மேட்டுப்பாளையம் காவல் துறையினர் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்திலிருந்து தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுவினை சேர்ந்த 45 பேர் கோவைக்கு வரவழைக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளனர்.