ஆப்நகரம்

முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் கோவைக்கு ஸ்விட் நியூஸ்!

திமுக தலைவர் முக ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள சூழலில் கோவையில் இனிப்போடு செய்தி வழங்கப்பட்டது.

Samayam Tamil 7 May 2021, 3:08 pm
தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்றதைத் தொடர்ந்து,கோவை மாவட்டம் முழுவதும் திமுகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Samayam Tamil முதல்வராக ஸ்டாலின் பதவி ஏற்றவுடன் கோவைக்கு ஸ்விட் நியூஸ்!


நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைக்கிறது. சட்டசபை தலைவராக திமுக கட்சித் தலைவர் முக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டு எளிமையாக நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வராக இன்று அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்த சூழலில் அவர் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டதைக் கொண்டாடும் விதமாகத் தமிழகம் முழுவதும் திமுகவினர் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கொரோனா தீவிரம் கோவையில் முன்னெச்சரிக்கை, ரோடுகள் எம்ப்டி!

இதன் ஒரு பகுதியாகக் கோவை மேற்கு மாநகர் மாவட்டம், கவுண்டம்பாளையம் பகுதி எட்டாவது வட்டக் கழகம் சார்பாகச் செயலாளர் வெற்றிவேல் தலைமையில் இடையர்பாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இதில் அனைவரும் முகக்கவசம் அணிந்து தனி மனித இடைவெளியைப் பின்பற்றி இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி