ஆப்நகரம்

பறவைகளுக்குத் தண்ணீர் வைக்கணும் கோவை மக்களே தோனுச்சா உங்களுக்கு?

கோவை மாவட்டத்தில் பறவைகளுக்கும் தண்ணீர் தேவை என்ற புரிதலை சமூக ஆர்வலர் ஒருவர் முன்னுதாரனமாகயிருந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

Samayam Tamil 7 Mar 2021, 6:00 pm
காலநிலை மாற்றத்தால் கோடைக் காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த வெயிலின் தாக்கம் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
Samayam Tamil பறவைகளுக்குத் தண்ணீர் வைக்கணும் கோவை மக்களே தோனுச்சா உங்களுக்கு?


இந்த சூழலில் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க அனைத்து உயிர்களுக்கும் நீர் அவசியமாகும். அந்த நீரின்றி பறவைகள் தவிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் வன உயிர் ஆர்வலர்கள் அனைவரின் வீடுகளுக்கு வெளியே பறவைகளுக்குத் தண்ணீர் வையுங்கள் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஆத்மா அறக்கட்டளை நிறுவனர் சரவணன். இவர் சிங்காநல்லூர் மாநகராட்சி மயானத்தில் உள்ள மரங்களில் தட்டுக்களில் தண்ணீர் ஊற்றி பறவைகளுக்குக் குடிக்க நீர் வைத்து வருகிறார்.

7 வயது சிறுமி பாலியல் கொலை: நீதிபதிகள் கோவைக்கு நேரில் சென்று விசாரணை!

இவரின் இந்த செயல் சமூகவலைதளத்தில் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. அதே வேளையில் இவர் மாவட்டத்தில் இந்த சேவை தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

எதற்காக நீர் வைக்க வேண்டும் அப்படிச் செய்வதால் நமக்கும் சமூகத்திற்கும் எதுபோன்ற நல்லது நடக்கும் போன்றவற்றை விலக்கி வருகிறார்.

அடுத்த செய்தி