ஆப்நகரம்

குழந்தை குட்டிகளுடன் கோவை மெயின் ரோட்டில் காட்டு யானைகள் உலா: அதிர்ச்சி காட்சிகள்!

கோவை மாவட்டம் கூடலூர் சாலைகளில் நடமாடும் காட்டு யானைகளால் கிராம மக்கள் மீண்டும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Samayam Tamil 18 Jun 2021, 12:31 pm
கோவை மாவட்டம் கூடலூர் பகுதியில் 4 மைல் பகுதியில் கடந்த ஒரு வாரக் காலமாகக் குட்டிகளுடன் யானைகள் கூட்டமாக இரவு நேரத்தில் நடமாடி வருகின்றன.
Samayam Tamil ழந்தை குட்டிகளுடன் கோவை மெயின் ரோட்டில் காட்டு யானைகள் உலா செல்லும் அதிர்ச்சி காட்சிகள்!


இதனால் குறிப்பிட்ட பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த காட்டு யானைகளை வனத்திற்குள் விரட்டக் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த சூழலில் கடந்த 2 நாட்களுக்கு முன் இரவு நேரத்தில் சாலையில் நடமாடிய காட்டு யானைகள் அங்குள்ள விவசாய பயிர்களைச் சேதப்படுத்தின.

வீட்டில் கொரோனா பரிசோதனை, கருவி கோவைக்கு வந்தது: விலை கம்மிதான்!
இதுகுறித்து தகவல் அறிந்த வந்த வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்நிலையில் இந்த யானைகள் இப்போது மீண்டும் சாலைகளில் சுற்றித் திரிகின்றன.

இப்படி குட்டிகளுடன் வரும் இந்த காட்டு யானை கூட்டம் கிராமப்பகுதிக்குள் சுற்றித் திரிவதால் உயிருக்கு ஆபத்து நிலவுவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். யானைகள் ஊருக்குள் வருவதைத் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி