ஆப்நகரம்

திமுக அரசு சொன்னபடி சூயஸ் நிறுவனத்தை ஒழிக்குமா?: கூட்டணி கட்சி எம்பி வலியுறுத்தல்!

சூயஸ் நிறுவனத்துடனான குடிநீர் ஒப்பந்தத்தை ரத்து செய் எனக் கூறி கோவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்.

Samayam Tamil 11 Oct 2021, 4:53 pm
கோவை மாநகர மக்களின் குடிநீர் உரிம ஒப்பந்தத்தை சூயஸ் நிறுவனத்துடன் இருந்து விடுவிக்க வேண்டும் என சிங்காநல்லூர் சிபிஎம் நகரக்குழு மாநாட்டு தீர்மானத்தில் வலியுறுத்தியுள்ளது.
Samayam Tamil திமுக அரசு சொன்னபடி சூயஸ் நிறுவனத்தை ஒழிக்குமா?: கூட்டணி கட்சி எம்பி வலியுறுத்தல்!


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை சிங்கை நகரக்குழு 10 ஆவது மாநாடு வரதராஜபுரத்தில் நடைபெற்றது. மாநாட்டை துவக்கி வைத்து கோவை நாடாளுமன்ற உறுப்பினருமான பிஆர் நடராஜன் உரையாற்றினார். மாநாட்டை வாழ்த்தி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே அஜய்குமார் உரையாற்றினார்.

முன்னதாக மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் முன்மொழியப்பட்டது. இதில், கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கான குடிநீர் விநியோக உரிமையை கடந்த அதிமுக அரசு சூயஸ் என்கிற பன்னாட்டு நிறுவனத்திடம் ஒப்படைத்தது. இதனை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி, திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்து போராடினர்.

இதன் காரணமாக சிபிஎம், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்திருந்தது. இதனையடுத்து மக்களின் கடும் எதிர்ப்பு வெளிப்பட்ட நிலையில் சட்டமன்ற தேர்தல் காலத்தில் திமுக தனது தேர்தல் அறிக்கையில் சூயஸ் நிறுவனத்துடனான குடிநீர் விநியோக ஒப்பந்தத்தை ரத்து செய்வோம் என தெரிவித்திருந்தது.

5 வழித்தடங்களில் மெட்ரோ ரயில்; கலக்கல் நகராகும் கோயம்புத்தூர்!
பின்னர் தற்போது திமுக அரசு பொறுப்பேற்றுள்ளது. மக்களின் விருப்பத்தை உணர்ந்து சூயஸ் உடனான ஒப்பந்தத்தை திமுக அரசு ரத்து செய்யும் என்கிற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பினரிடமும் உள்ளது. இந்நிலையில் சூயஸ் நிறுவனம் எவ்வித தங்குதடையின்றி தனது பணிகளை தொடர்கிறது.

திமுக அரசு தங்களது நிலைப்பாட்டை தெளிவு படுத்த வேண்டும். கோவை மாநகர மக்களின் குடிநீர் உரிமையை கோவை மாநகராட்சியிடமே வழங்க வேண்டும். சிங்கநல்லூர் சாலை, வெள்ளளூர் சாலை, திருச்சி சாலை சந்திப்பில் எப்போதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனால் பள்ளி, கல்லூரி செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகிறார்கள். இதற்கு தீர்வாக தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கீடு செய்து இப்பகுதியில் மேம்பாலம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இது உள்பட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

அடுத்த செய்தி