ஆப்நகரம்

பன்றி வேட்டைக்குச் சென்ற இடத்தில் இளைஞர் சாவு: அப்படி என்னதான் நடந்து?

கோவையில் வனத்திற்குள் பன்றி வேட்டைக்குச் சென்ற கும்பலில் ஒருவர் நாட்டுத் துப்பாக்கி வெடித்துப் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 19 Jan 2021, 1:41 pm
கோவை தீத்திபாளையம், மாதேஷ் கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் அய்யாச்சாமி(40). இவர் நேற்று இரவு தனது நண்பர்களான பாபு, ஆனந்த், ரங்கநாதன், ராமசாமி ஆகியோருடன் சேர்ந்து சட்டவிரோதமாக உரிமம் இல்லாத துப்பாக்கியுடன் வனப்பகுதிக்குள் விலங்குகளை வேட்டையாடச் சென்றார்.
Samayam Tamil பன்றி வேட்டைக்குச் சென்ற இடத்தில் இளைஞர் சாவு: அப்படி என்னதான் நடந்து?
பன்றி வேட்டைக்குச் சென்ற இடத்தில் இளைஞர் சாவு: அப்படி என்னதான் நடந்து?


விசாரணையில் இவர்கள் தாங்கள் வைத்துள்ள துப்பாக்கியால் காட்டுப்பன்றி, முயல் போன்றவற்றை வேட்டையாட முற்பட்டதாகத் தெரியவந்துள்ளது. வேட்டைக்குச் சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் வைத்திருந்த துப்பாக்கி திடீரென மரக்கிளையில் உராய்ந்து வெடித்தது.

இதில் அய்யாசாமி மீது குண்டு பாய்ந்து. தொடர்ந்து அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து வனப்பகுதியில் பலியானார். இளைஞர் மரணம் குறித்து தகவல் அறிந்த மலைக் கிராம மக்கள் மற்றும் வனத்துறையினர், பேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

யானையிடமிருந்து நூலிழையில் உயிர் தப்பிய பைக்கர்ஸ்...

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி நண்பர்கள் 4 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உரிமம் இல்லாத துப்பாக்கி யாருடையது என்பது தொடர்பாகவும் அய்யாசாமி மரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக அதிகாரிகளும் வனத்துறையினரும், பிடிபட்ட 4 இளைஞர்களிடம் இதுவரை வேட்டையாடப்பட்ட வனவிலங்குகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி