ஆப்நகரம்

ஹாயாக 24 மூடை குட்கா போதைப் பொருளை ஆட்டோவில் கடத்தி வந்த 2 பேர்!

உக்கடம் லாரி பேட்டையில் ஒரு லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த குட்கா கடத்தலில் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 20 Jan 2021, 10:46 am
கோவை மாவட்டத்துக்கு கர்நாடகாவிலிருந்து அதிகளவிலான குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகிறது.
Samayam Tamil ஹாயாக 24 மூடை குட்கா போதைப் பொருளை ஆட்டோவில் கடத்தி வந்த 2 பேர்!
ஹாயாக 24 மூடை குட்கா போதைப் பொருளை ஆட்டோவில் கடத்தி வந்த 2 பேர்!


கல்லூரி மாணவர்கள் மற்றும் வட இந்தியர்களைக் குறிவைத்தே இந்த போதைப் பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோவை உக்கடம் லாரி பேட்டையில் போதைப் பொருட்கள் கர்நாடகாவில் இருந்து சரக்கு வாகனங்களில், கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

கோவையில் ரூம் போட்டு கஞ்சா விற்று வந்த கேரள வாலிபர் கைது!

இந்த தகவலின் அடிப்படையில், மாநகர துணை ஆணையர் ஸ்டாலின் தலைமையிலான காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் சரக்கு ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட ஒரு லட்சம் மதிப்பிலான 24 மூட்டை குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக அப்பாஸ் மற்றும் ஜெய்னுல்லா அபுதீன் ஆகிய இருவரைக் கைது செய்து உக்கடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி