ஆப்நகரம்

அழுகிய நிலையில் பெண் யானை கோவை வனத்தில் மீட்பு: பின்னணி என்ன?

கோவை மாவட்டத்தில் அழுகிய நிலையில் பெண் யானை ஒன்று மீட்கப்பட்டுள்ள சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 14 Jun 2021, 3:40 pm
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வனச் சரகத்தில் உட்பட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த சூழலில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வனத்துறையினர் உருகுழிபள்ளம் என்ற இடத்தில் அழுகிய நிலையில் பெண் யானை இறந்து கிடப்பதைப் பார்த்துள்ளனர்.
Samayam Tamil அழுகிய நிலையில் பெண் யானை கோவை வனத்தில் மீட்பு: பின்னணி என்ன?


இதுகுறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் படி வனத்துறையினர், கால்நடைத்துறை டாக்டர் குழுவினர் அங்கு விரைந்து சென்று இறந்து கிடந்த யானையின் உடலைப் பிரேதப் பரிசோதனை செய்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், “இறந்து கிடப்பது சுமார் 46 வயதான பெண் யானை. இறந்து 4 நாட்களுக்கும் மேல் ஆகிறது. கடந்த சில நாட்களாக வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு வந்த காரணத்தால் யானை எதுவும் சாப்பிடாமல் இறந்திருக்கலாம்” என்றனர்.

நாறும் கோவை சுத்தம் செய்யுமா திமுக அரசு, அதிமுக பணியாவது செய்யுமா?: மக்கள் ஏக்கம்!
வாங்கி மதுபாட்டில்கள் முன்பாக தரையில் விழுந்து கும்பிட்டு சென்றார். தொடர்ந்து ஏராளமான தொழிலாளர்களும், இளைஞர்களும் காத்திருந்து மதுவை வாங்கிச் சென்றனர்.

கொரோனா பரவல் 15ஆயிரம் அளவிற்குக் குறைந்த நிலையில் தற்போது மதுபான கடைகள் திறக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி