ஆப்நகரம்

Free TN Temples: ஈஷாவின் புதிய திட்டத்தின் விளைவு என்ன? எழுத்தாளர் இரா.முருகவேள் எச்சரிக்கை

கோவையைச் சேர்ந்தவரும், பிரபல எழுத்தாளருமான இரா.முருகவேள் ஜக்கி வாசுதேவின் புதிய இயக்கத்தின் விளைவு குறித்து ​​பதிவிட்டுள்ளார்.

Samayam Tamil 15 Mar 2021, 11:08 pm
கோவை ஈஷா யோகா மைய நிறுவனரும், ஆன்மீகவாதியுமான ஜக்கி வாசுதேவ் அவ்வப்போது மிஸ்டு கால் இயக்கங்களை அறிவிப்பது வழக்கம். . அந்த வகையில் தற்போது கோயில்களை மீட்க வேண்டும் என்ற இயக்கத்துக்காக மிஸ்டு கால் கொடுக்கும் இயக்கத்தை அறிவித்துள்ளார்.
Samayam Tamil isha free temples


இந்நிலையில் கோவையைச் சேர்ந்தவரும், பிரபல எழுத்தாளருமான இரா.முருகவேள் இந்த இயக்கத்தின் விளைவு குறித்து பதிவிட்டுள்ளார்.

அவர் தமது பதிவில் “ இந்துக் கோவில்கள்களை அரசிடம் இருந்து அதாவது இந்து அறநிலையத் துறை இடம் இருந்து மீட்பது பற்றி ஜக்கி வாசுதேவ் பேசியுள்ளார். இதற்கு ஒரு இயக்கமும் தொடங்கி உள்ளார்.

இது சங்க் பரிவாரின் கோரிக்கை ஆகும். ஜக்கி வாசுதேவ் பலமுறை பிஜேபி அரசின் நடவடிக்கைகளை ஆதரித்துள்ளார். காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்துக்கு எதிராக பேசியுள்ளார். Gst வரியை ஆதரித்துள்ளார். இப்போது இந்த கோவில் விவகாரம்.

50 கோடி ரூபாய் கடனுடன் தேர்தலில் களமிறங்கும் உலக நாயகன்!

இந்தியாவின் மேல்தட்டு வர்க்கங்கள், சாதிகள் ஒரு ஹைப்பர் தேசிய வாதத்தில் மூழ்கி உள்ளன. இவர்களை ஆதரவுத் தளமாகக் கொண்டுள்ள ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள் இந்த அரசியலை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டிய நிலை இருக்கிறது.

மோடி அரசும் ஜக்கி வாசுதேவ், ராம்தேவ், ஸ்ரீ ஸ்ரீ போன்றோருக்கு அங்கீகாரம் வழங்கி உள்ளது. முன்னாள் பின்நவீனத்துவாதியும், முன்னாள் டிராட்ஸ்கிய வாதியும், இந்நாள் இந்துத்துவ வாதியுமான ஸ்வப்பன் தாஸ் குப்தா கூறுகிறார் "இன்றைய இந்து மதத்தின் சக்தி, காஞ்சி மடம் போன்ற பிராமனிய நிறுவனங்களில் தங்கி இருக்கவில்லை. புகழ் பெற்ற கோவில்கள், வாழும் சாதுக்கள், பிரச்சாரகர்கள் இவர்களே மக்களை மதத்தை நோக்கி ஈர்க்கின்றனர்.

தாஸ் குப்தா இந்துத்துவ தலைவர்களை, இந்த புதிய சன்னியாசிகளை இந்துத்துவ நோக்கத்துக்காக பணிசெய்ய அழைக்க வேண்டும்" என்றார். இதுவே தற்போது நடக்கிறது.

இந்துத்துவ அமைப்புகளின் கோரிக்கையை ஜக்கி எதிரொலிக்கிறார. இது ஒரு அரசியல் செயல்திட்டம். இன்றைய சூழலில் தேர்தல் கூட்டும் கூட.

எளிமை, நேர்மை பேசும் சகாயம், தேர்தல் திட்டம் இதுதானாம்!

தமிழக உயர் சாதிகள் ஏற்கெனவே இந்துத்துவ மயமாகி உள்ள நிலையில் ஜக்கியின் அறைகூவல் இந்துத்துவ consolidation kku உதவும்.

இதே கோரிக்கை தெருக்களில் இந்துத்துவ அமைப்பினரால் எழுப்பப்படும் போது ஜக்கி வாசுதேவ் போன்றோரின் ஆதரவு அதற்கு புதிய வலிமையை தரும்.” என்று முருகவேள் தமகது பதிவில் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி