ஆப்நகரம்

காதலிக்கு கல்யாணம்... பெண்ணின் தந்தையைக் கொன்று தானும் விஷம் குடித்த காதலன்

ஜார்ஜ் இன்று பிற்பகல் வீட்டில் தனியாக இருந்த போது வந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். பின்னர் கையில் வைத்திருந்த கத்தியால் ஜார்ஜ் ஜான் ஏஞ்சலினை குத்தி கொலை செய்தார்.

Samayam Tamil 12 Jan 2021, 10:56 am
கோவை மாவட்டம் செஞ்சேரிமலை அருகே உள்ள எஸ்.குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் ஜான் ஏஞ்சலிஸின். தனியார் கயிறு ஆலையில் கணக்காளராக பணிபுரிந்து வருகின்றார். இவரது மனைவி செலின் ரோமிலா. இவர் ஒடக்கல்பாளையம் துவக்க பள்ளியில் தலையை ஆசிரியையாக பணிபுரிந்து வருகின்றார்.
Samayam Tamil murder suicide file shot


இந்த தம்பதிக்கு இரு பெண்கள் இருக்கும் நிலையில் , மூத்த மகளுக்கு திருமணம் முடிந்து கணவருடன் பெங்களூரில் வசித்து வருகின்றார். இளைய மகள் கன்னியாகுமரியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றார்.

இந்நிலையில், ஜார்ஜின் இரண்டாவது மகளை தனக்கு திருமணம் செய்து கொடுக்கும்படி, அதே ஊரை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் பெண் கேட்டுள்ளார். ஆனால் கார்த்திக்குக்கு தனது இளைய மகளைத் திருமணம் செய்து கொடுக்க மறுத்த ஜார்ஜ் , வேறு ஒருவருடன் தனது இரண்டாவது மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் செய்து முடித்தார்.

போலீஸ் மேலயே புகார் கொடுப்பியா? இச்சை அதிகாரியும் மக்கள் போராட்டமும்

இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் , ஜார்ஜ் இன்று பிற்பகல் வீட்டில் தனியாக இருந்த போது வந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். பின்னர் கையில் வைத்திருந்த கத்தியால் ஜார்ஜ் ஜான் ஏஞ்சலினை குத்தி கொலை செய்தார்.

பின் கார்த்திக்கும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஜார்ஜ் ஜான் ஏஞ்சலினை கொலை செய்து விட்டு , விஷம் அருந்தியதை நண்பர்களுக்கு செல்போனில் அழைத்து தெரியபடுத்தவே, விரைந்து வந்து கார்த்திக்கை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையானது அளிக்கப்பட்டு வருகின்றது.

ஹீரோயின் ஆசையில் சென்னைக்கு வந்து விபச்சாரத்தில் சிக்கிய 2 மாடல்கள்

இதனிடையே கணவரை பல முறை தொடர்பு கொண்டும் போனை எடுக்காததால் , அவர் பணிபுரியும் நிறுவனத்தில் செலின் விசாரித்துள்ளார். பின் நிறுவன ஊழியர்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் ஜார்ஜ் ஜான் ஏஞ்சலின் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது குறித்து உடனடியாக சுல்த்தான் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவம் இடத்திற்கு வந்த சுல்த்தான்பேட்டை போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன்ர்.

அடுத்த செய்தி