ஆப்நகரம்

கோவை: அன்னூரில் பெரியார் குறித்து அவதூறு பரப்பியவரும் கைது

ஏற்கனவே மோடி குறித்து அவதூறு பரப்பிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பெரியார் குறித்து அவதூறு பரப்பியவ்ர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 22 Jul 2020, 4:33 pm
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் கந்த சஷ்டி கவசம் குறித்து பேஸ்புக்கில் அவதூறு பரப்பிய இளைஞர், நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், பெரியார் குறித்து பேஸ்புக்கில் அவதூறு பரப்பிய நபர் மீது இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil பெரியார் குறித்த அவதூறு


கோவை மாவட்டம் அன்னூர் பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன் என்ற இளைஞர் தனது முகநூல் பக்கத்தில் பிரதமர் மோடியை குறித்தும், கந்த சஷ்டி கவசம் குறித்தும் அவதூறாக பதிவிட்டுள்ளதாக இந்து அமைப்பை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர்அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் சண்முகநாதன் மீது பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட திருவாய் சண்முகநாதன் என்பவர் தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் மாணவர் அமைப்பான சுயமரியாதை இயக்கத்தில் அன்னூர் ஒன்றியத்தின் தலைவராக உள்ளார்.

மோடி குறித்து ஃபேஸ்புக்கில் அவதூறு: சட்டக் கல்லூரி மாணவர் மீது வழக்குப் பதிவு!!

இந்நிலையில், “ஹேர் லைன்ஸ் நந்தா” என்ற பெயரில் முகநூலில் இருக்கும் நந்தா என்பவர் பெரியார் குறித்து அவதூறாக பதிவிட்டார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கககோரி தந்தை பெரியார் திராவிடக் கழகத்தை சேர்ந்த கோபால கிருஷ்ணன் என்பவர் அளித்த புகாரின் பேரில், அதே 3 பிரிவுகளின் கீழ் அன்னூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



முன்னதாக, இந்த புகாரின் மீது சமமாக நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி பெரியார் ஆதரவாளர்கள் அன்னூர் காவல் நிலையம் முன்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

ஏற்கனவே மோடி குறித்து அவதூறு பரப்பிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பெரியார் குறித்து அவதூறு பரப்பியவ்ர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி