ஆப்நகரம்

பள்ளி அருகே ஒட்டப்பட்ட 'இரண்டாம் குத்து' போஸ்டர்கள்..! சீறிய கோவை இளைஞர்!

கோவையில் பள்ளிக்கு எதிரே ஒட்டப்பட்டிருந்த "இரண்டாம் குத்து" என்ற சினிமா போஸ்டரை ஆவேசத்துடன் கிழித்த இளைஞர் வீடியோ வைரலாகி வருகிறது.

Samayam Tamil 9 Oct 2020, 5:32 pm
கோவை ராஜவீதி பகுதியை சேர்ந்தவர் தினேஷ்(35). தனியார் நகைக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று வழக்கம்போல பணிக்கு செல்லும் போது பள்ளிக்கு எதிரே ஒட்டப்பட்டிருந்த "இரண்டாம் குத்து" என்ற சினிமா போஸ்டரை பார்த்து ஆவேசம் அடைந்தார். தொடர்ந்து அவர் சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த டீசர் போஸ்டர்கள் முழுவதையும் கிழித்தார். இதையடுத்து தினேஷ் போஸ்டரை ஆவேசமாக கிழிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.
Samayam Tamil irandam kuthu poster


இதுகுறித்து தினேஷ் கூறும்போது, "இருட்டு அறையில் முரட்டு குத்து" என்ற படத்தின் இயக்குனர் எடுத்த அடுத்த படம்தான் இந்த "இரண்டாம் குத்து". இது மிகவும் ஆபாசமாக உள்ளது. அதேபோல இந்த போஸ்டர் பள்ளிக்கு எதிரே ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரால் பெண்கள் இந்த பகுதியை கடக்கும் போது வருத்தத்திற்கு உள்ளாகின்றனர். ஆகவே முகம் சுழிக்கும் அளவிற்கு ஆபாசமாக உள்ள இந்த போஸ்டரை கிழித்தேன் என தெரிவித்தார்.

இந்த திரைப்படமானது '' இருட்டு அறையில் முரட்டு குத்து'' என்ற முதல் பாகத்தின் தொடக்கமாக சந்தோஷ் ஜெயக்குமார் என்பவர் இயக்கி அவரே நடித்துள்ளார். இளசுகளை டார்கெட் வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த அடல்ட் படத்தின் டீசர் வெளியாகி பெரும் சர்ச்சைக்குள் சிக்கியுள்ளது.


திண்டுக்கல் சிறுமி கொலை: கோவையில் சலூன் கடைகள் அடைப்பு...!

எனினும், நெகட்டிவ் விமர்சனங்களுக்கு பிராக்டிகலான பதில்களை கூறி வரும் சந்தோஷ் ஜயகுமாரை இயக்குனர் பாரதிராஜாவும் தற்போது விமர்சித்துள்ளார். இப்படி பல விமர்சனங்களை பெற்று வரும் இந்த திரைப்படத்திற்கு காத்திருப்போர் பட்டியல் வெகுநீளம் என்பதுதான் கசப்பான உண்மை.

அடுத்த செய்தி