ஆப்நகரம்

தமிழகத்தில் 1 லட்சத்து 51 ஆயிரம் பேர் கைது..! அபராதம் எவ்வளவு தெரியுமா?

தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவை மீறி வாகனங்களில் வெளியே சுற்றியவர்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் மீது காவல்துறை எப்ஐஆர் போட்டுள்ளது.

Samayam Tamil 11 Apr 2020, 3:22 pm
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை விளைவாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கை மீறி தேவையற்ற காரணங்களுக்காக வெளியே சுற்றுபவர்கள் மீது குற்றவியல் நடைமுறை சட்டத்தின் அடிப்படியில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்திருந்தது. இருப்பினும் மார்ச் 24ம் தேதியில் இருந்து இன்று வரை ஊரடங்கை மீறி மக்கள் பலர் நாளுக்குநாள் வந்து கொண்டிருக்கின்றனர்.
Samayam Tamil தமிழ்நாட்டில் 144 தடை


அந்தந்த மாவட்டங்களில் போலீசாரின் கையில் சிக்கும் இவர்களுக்கு நூதன தண்டனை வழங்கப்பட்டு எச்சரித்து அனுப்பபடுகின்றனர். இதனால் போலீசாரின் வேண்டுகோளை பெரிதாக கருதாமல் தொடர்ச்சியாக விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் இன்று 11 .04 2020 நிலவரப்படி ஊடாகி மீறி வெளியே சுற்றிய 1,40,176 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 1,19,286 நகங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

'வாங்கோ, வாங்கோ கொரோனா மருந்து இதுதான்'... கம்பி எண்ணும் பீடா கடைக்காரர்...

மொத்தம் 1,51,151 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்கை மீறி வெளியே வந்த வாகன ஓட்டிகளிடம் 53,72,044 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இது இன்று வரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை ஆகும். இனி வரும் நாட்களிலாவது பொதுமக்கள் ஊரடனாகை கடைபிடிக்க வேண்டும் எனவும், இல்லையெனில் நடவடிக்கை கடுமையாகும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.

அடுத்த செய்தி