ஆப்நகரம்

பி.எஸ்.என்.எல் அலுவலர் வீட்டில் 100 சவரன் தங்க நகைகள் கொள்ளை

திருநெல்வேலியில் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவருடைய வீட்டில் ரூ. 1 லட்சம் பணம், 100 சவரன் தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 14 Jul 2019, 9:11 pm
சங்கு நகர் பகுதியைச் சேர்ந்த பாலன் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் உயர் பொறுப்பில் பதவி வகித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவருடைய இரண்டாவது மகன் விதினுக்கு கடந்தமாதம் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
Samayam Tamil திருநெல்வேலியில் 100 சவரன் நகை கொள்ளை- போலீசார் விசாரணை
திருநெல்வேலியில் 100 சவரன் நகை கொள்ளை- போலீசார் விசாரணை


இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலன், அவருடைய மனைவி மற்றும் மூத்த மகன் ஆகியோர் கேரளாவுக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு அருகிலுள்ள வீட்டில் வசித்து வரும் இளைய மகன் விதின் மனைவியுடன் பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளனர்.

அப்போது தான் தங்களுடைய வீட்டில் இந்த கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. உடனே இந்த சம்பவம் தொடர்பாக பனங்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கொள்ளை போன பணம், நகைகள் குறித்து கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு வருகின்றன.

அடுத்த செய்தி