ஆப்நகரம்

அயனாவரத்தில் பள்ளி மாணவி தற்கொலை; கடிதத்தில் உருக்கம்..!

அயனாவரத்தில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 31 Mar 2022, 3:13 pm
சென்னை அயனாவரம் பி.இ. கோவில் தெருவில் வசித்து வருபவர் சுப்பையா. இவரது மனைவி தாட்சாயிணி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்நிலையில், தாட்சாயிணி உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாகிவிட்டார். சுப்பையா வில்லிவாக்கத்தில் தையல் கடை நடத்தி வருவதால் தினமும் வேலை முடிந்து மாலைதான் வீட்டுக்கு வருவார்.
Samayam Tamil மாதிரி புகைப்படம் (தற்கொலை கடிதம்)


இதனால், தாட்சாயிணியை 11 ஆம் வகுப்பு படித்து வந்த மகள் பவதாரினி கூடவே இருந்து கவனித்து வந்துள்ளார். மேலும், தாயின் நிலைமையை கண்டு சிறுமி சோகத்தில் நிலைகுலைந்து போயுள்ளார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தாட்சாயிணி இறந்துவிட்டார். இதனால் மேலும் கவலையில் ஆழ்ந்த சிறுமியை தினம் தினம் தாயின் நினைவுகள் வாட்டி எடுத்துள்ளது.

இந்த சூழலில் சிறுமி நேற்று மதியம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வீட்டில் ஆய்வு செய்தபோது சிறுமி எழுதியிருந்த தற்கொலை கடிதம் கிடைத்தது.

புகார் கொடுத்தா கண்டுக்க மாட்டிங்களா..? சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பயணி

அதில், ''சாவை நோக்கி நான் செல்கிறேன். எல்லாம் முடிந்து போய் விட்டது'' என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. மேலும், தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி