ஆப்நகரம்

நகை அடகு உரிமையாளரிடம் 12.5 சவரன் தங்கநகை ரூ. 1 லட்சம் கொள்ளை!

டூவிலரில் சென்ற நகை அடகு உரிமையாளரிடம் 12.5 சவரன் தங்கநகை ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் ரொக்கம் கொள்ளை!

Samayam Tamil 7 Jun 2019, 9:58 am
ஜோலார்பேட்டை அருகே டூவிலரில் சென்ற நகை அடகு உரிமையாளரிடம் 12.5 சவரன் தங்கநகை ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
Samayam Tamil நகை அடகு உரிமையாளரிடம் 12.5 சவரன் தங்கநகை ரூ. 1 லட்சம் கொள்ளை!
நகை அடகு உரிமையாளரிடம் 12.5 சவரன் தங்கநகை ரூ. 1 லட்சம் கொள்ளை!


வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே சந்தை கோட்டையூர் அப்பாச்சி கவுண்டர் தெருவை சேர்ந்தவர் அவின்குமார்(35). இவர் கோடியூரில் நகை அடகு கடை வைத்துள்ளார். நேற்று இரவு அவின்குமார் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு டூவிலரில் தனது தாயை அழைத்துக் கொண்டு சென்றார்.

அப்போது பழைய வாரச் சந்தை அருகே சென்று கொண்டிருந்தபோது இவர்களை பின்தொடர்ந்து மற்றொரு பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள் அவின்குமாரின் டூவிலரை இடித்து கீழே தள்ளிவிட்டு அவர் வைத்திருந்த 12.5 சவரன் தங்க நகைகள், ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணப்பையை பறித்து கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

நகை அடகு கடை உரிமையாளர் அவின்குமார்


இதுகுறித்து அவின்குமார் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கொள்ளைபோன நகைகள், மக்கள் அடகு வைத்தது என்பதும், கொள்ளை போன நகைகள் மற்றும் பணத்தின் மதிப்பு ரூ.4.50 லட்சம் மதிப்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சமீப காலமாக வேலூர், அரக்கோணம், நாட்றம்பள்ளி பகுதிகளில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் பீதியடைந்து உள்ளனர். எனவே காவல்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணி வந்து குற்றசம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும்படி வேலூர்வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி