கரூர் மாவட்டம் பசுபதி பாளையம் முதல் தெருவில் வசித்து வருபவர்கள் ஆனந்த்-ராஜேஸ்வரி தம்பதி. இவர்கள் மகள் கோமதி. கரூர், தேர் வீதியில் உள்ள அரசுப் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கோமதி சமீப நாட்களாகக் காய்ச்சலில் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று பள்ளியில் பிளஸ் 2 வகுப்புக்குச் சிறப்பு வகுப்பு வைக்கப்பட்டது. இதற்காக, கோமதி இன்று காலை 9 மணிக்குப் பள்ளிக்குச் சென்றார். அங்கு அவர் இயற்கை உபாதையைக் கழிக்க கழிவறைக்குச் சென்றபோது, மயக்கம் போட்டு விழுந்து விட்டார்.
நாய்க்குட்டி எங்கே? தாய் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த மகள்!
அப்போது, கழிவறைக்குச் சென்ற மாணவிகள் கோமதி மயங்கிக் கிடந்ததைப் பார்த்து அதிர்ந்து போய், பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ந்துபோன, ஆசிரியர்கள் உடனடியாக கோமதியை மீட்டு கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆட்டோவில் கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில், கோமதியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்பே இறந்துவிட்டதாகக் கூறினர். இதையடுத்து, கோமதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காகக் கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சம்பவம் குறித்து கரூர் நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 மணிக்கு திருமணம்; 7 மணிக்கு தற்கொலை - மணமகன் செய்த காரியத்தின் சோகப் பின்னணி!
இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து அறிந்த கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் சம்பவ இடத்துக்கு விரைந்து கோமதியின் பெற்றோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கு வந்த மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இன்று பள்ளியில் பிளஸ் 2 வகுப்புக்குச் சிறப்பு வகுப்பு வைக்கப்பட்டது. இதற்காக, கோமதி இன்று காலை 9 மணிக்குப் பள்ளிக்குச் சென்றார். அங்கு அவர் இயற்கை உபாதையைக் கழிக்க கழிவறைக்குச் சென்றபோது, மயக்கம் போட்டு விழுந்து விட்டார்.
நாய்க்குட்டி எங்கே? தாய் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்த மகள்!
அப்போது, கழிவறைக்குச் சென்ற மாணவிகள் கோமதி மயங்கிக் கிடந்ததைப் பார்த்து அதிர்ந்து போய், பள்ளி ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ந்துபோன, ஆசிரியர்கள் உடனடியாக கோமதியை மீட்டு கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆட்டோவில் கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில், கோமதியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்பே இறந்துவிட்டதாகக் கூறினர். இதையடுத்து, கோமதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காகக் கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சம்பவம் குறித்து கரூர் நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 மணிக்கு திருமணம்; 7 மணிக்கு தற்கொலை - மணமகன் செய்த காரியத்தின் சோகப் பின்னணி!
இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து அறிந்த கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் சம்பவ இடத்துக்கு விரைந்து கோமதியின் பெற்றோரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிக்கு வந்த மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.