ஆப்நகரம்

வாங்கிய கடனை கொடுக்க தவறிய டியூஷன் டீச்சரை துடிக்கக் துடிக்க கொன்ற 12 வயது சிறுவன்.!

மகாராஷ்டிராவில் கடன் பிரச்சனை காரணமாக 12 வயது சிறுவன் 30 வயது பெண் ஆசிரியரைக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 18 Sep 2019, 1:54 pm
மகாராஷ்டிரா மாநிலம் சிவாஜி நகரில் உருது பள்ளியை நடத்தி வருபவர் ஆயிஷா (30). தனக்குச் சொந்தமான இதே பள்ளியின் கட்டிடத்தில் வசித்து வரும் ஆயிஷா, மாலை நேரங்களில் மாணவர்களுக்கு டியூஷன் நடத்தியும் வருகிறார். இந்நிலையில் தனது டியூஷன் சென்டருக்கு வரும் 12 சிறுவனின் அம்மாவிடம் ஆயிஷா கடன் வாங்கியுள்ளதாகத் தெரிகிறது.
Samayam Tamil 1


வாங்கிய கடனை திரும்பத் தராததால் அவ்வப்போது சிறுவனின் தாயார் பணத்தைத் தரும்படி கேட்டு வந்துள்ளார். எனினும் நாட்கள் செல்ல செல்ல வாங்கிய கடன் நிலுவையிலேயே இருந்துள்ளது. இதனை அறிந்துகொண்ட சிறுவன் கடந்த திங்கட்கிழமை அன்று இரவு 8.30 மணி அளவில் டியூஷன் டீச்சரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளான்.

இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் ஆத்திரமடைந்த சிறுவன் அங்குச் சமையலறையிலிருந்த கத்தியை எடுத்து வந்து ஆயிஷாவை சரமாரியாகக் குத்தியுள்ளான். இதனால் வயிறு மற்றும் முதுகு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு, ஆயிஷா ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்துள்ளார்.

சம்பவத்தை நேரில் பார்த்த சக மாணவர்கள் அங்கிருந்து அலறி அடித்து ஓடியுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து சிவாஜி நகர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. கடன் விவகாரத்தால் கொலை செய்யப்பட்ட ஆயிஷாவுக்கு திருமணம் ஆகி ஒரே வருடத்தில் விவாகரத்தும் பெற்றுள்ளார்.

இவரது தந்தை அஸ்லாமும் ஓராண்டிற்கு முன்னர் சொத்து விவகாரத்தால் கொலை செய்யப்பட்டுள்ளார். தனிமையில் வாழ்ந்து வந்த ஆயிஷாவும் தற்போது கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த கொலை செய்த சிறுவன் மிகவும் பலவீனமானவன், கொலை செய்யும் அளவிற்கு துணிந்தவன் அல்ல. இவன் இப்படிச் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர். இந்நிலையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி