ஆப்நகரம்

பழனியில் 12 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் 2வது கணவன் கைது!

பழனியில் 12 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் இரண்டாவது கணவனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 15 Mar 2019, 10:45 am
பழனியில் 12 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் இரண்டாவது கணவனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil பழனியில் 12 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் 2வது கணவன் கைது!
பழனியில் 12 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய தாயின் 2வது கணவன் கைது!


பழனி அருகே உள்ள பெத்தநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியம்மாள். இவரது இரண்டாவது கணவர் காமராஜன். மாரியம்மாளுக்கு முதல் கணவன் மூலம் 12 வயது சிறுமி இருக்கிறாள். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இதனிடையே சிறுமி அடிக்கடி உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டதால், தாய் மாரியம்மாள், அருகில் இருக்கும் பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சிறுமியை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் சிறுமியின் உடலை பரிசோதித்ததில் அவர் ஆறு மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

பின்னர் இதுகுறித்து மருத்துவமனையில் சார்பில், பழனி சார் ஆட்சியர் அருண்ராஜுக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சார் ஆட்சியர் உத்தரவின் பேரில், காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் மாரியம்மாளின் இரண்டாவது கணவன் காமராஜன் தான் சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணம் என்பதும், மேலும் நீண்ட நாட்களாக அவன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அனைத்து மகளிர் போலீசார், காமராஜனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்தனர்.

அடுத்த செய்தி