ஆப்நகரம்

நடிப்பதில் ஆர்வம், திறமைசாலியான பிளஸ் டூ மாணவி சடலமாக மீட்பு...

திருவாரூர் அருகே 12ஆம் வகுப்பு மாணவி, உடலில் காயங்களுடன் சடலமாக இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 9 May 2020, 12:57 pm
திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது மகிழஞ்சேரி கிராமம். அங்கு பெரிய நாயகி அம்மன் கோவில் பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார் (45). கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவியும், மௌனிகா (17) என்ற மகளும் இருந்தனர். மௌனிகா 12ஆம் வகுப்பு தேர்வினை எழுதிவிட்டு தற்போது விடுமுறையில் உள்ளார். அதே கிராமத்தில் இவரது பாட்டி தனியாக ஒரு வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
Samayam Tamil திருவாரூர் அருகே 12ஆம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் பலி


இந்நிலையில், தினமும் பாட்டிக்கு துணையாக மவுனிகா அவருடன் உறங்குவது வழக்கம். இந்த சூழலில் கடந்த மே 8ஆம் தேதி மவுனிகா உறங்குவதற்காக தனது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார். மறுநாள் அன்று விடியற்காலை அப்பகுதி மக்கள் வயல் வேலைக்குச் சென்றபோது, உடலில் காயங்களுடன் மௌனிகா சடலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

சம்பவம் குறித்து மௌனிகாவின் வீட்டுக்கும், நன்னிலம் காவல் நிலையத்துக்கும் அடுத்தடுத்து தகவல் கொடுத்ததன் பேரில் போலீசார் அங்கு வந்து மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோவையில் காதலியை விமர்சித்த நண்பன் தம்பிள்சால் அடித்துக்கொலை..!

போலீசார் நடத்திய விசாரணையில், மவுனிகாவுக்கு நடிப்பதில் ஆர்வம் இருந்ததாகவும், அதன் காரணமாக 'என்னை நீங்கி செல்லாதே' என்ற குறும்படத்தில் அவர் நடித்துள்ளதாகவும் தெரிய வந்தது. மேலும், டிக்டாக்கிலும் வீடியோ வெளியிட்டும் வந்துள்ளார். அவர் மரணத்துக்கான காரணம், கொலையா? தற்கொலையா? அல்லது வேறேதேனும் காரணமா என்பதை குறித்து பிரேத பரிசோதனை முடிந்த பின்னரே தெரிய வரும்.

அடுத்த செய்தி