ஆப்நகரம்

காதலி இறந்த துக்கத்தில் இளைஞர் தற்கொலை..! இருவர் மரணத்தால் கீழ்வேளூரில் பரபரப்பு..!

நாகப்பட்டினம் அருகே காதலர்கள் இருவர் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 27 Sep 2021, 5:30 pm
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள எரவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவருக்கு வினித் குமார் (25) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அதே பகுதியில் 12ம் வகுப்பு படித்து வந்த சுபஸ்ரீ என்ற மாணவியை காதலித்து வந்துள்ளார்.
Samayam Tamil தற்கொலை செய்துகொண்டவர்கள்


இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு காதலர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சுபஸ்ரீ மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் சுபஸ்ரீ தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அதனையடுத்து மகளின் சாவுக்கு வினித் குமார்தான் காரணம் என்றுகூறி கீழ்வேளூர் காவல் நிலையத்தில் சுபஸ்ரீயின் பெற்றோர் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் வினித் வசிக்கும் பகுதியில் விசாரணையில் ஈடுபட்டனர்.

நாகை மீனவன் படகில் சிக்கிய 280 கிலோ கஞ்சா..! ரவுண்டு கட்டிய போலீசார்

இதற்கிடையில் வினித் குமார் தனது வீட்டுக்கு பின்புறத்தில் உள்ள காட்டுப்பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். விசாரணையில் காதலி இறந்த துக்கத்தில் இருந்து வந்த வினித்குமார் தற்கொலை செய்துகொண்டதாக தெரிய வந்துள்ளது.

இருவரின் மரணம் தொடர்பாக கீழ்வேளூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலி இறந்த மன உளைச்சல் காரணமாக வினித் குமாரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கீழ்வேளூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி